நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 September, 2022 9:59 PM IST

சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.13,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்திற்காக மொத்தம் ரூ. 1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கான 800 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 1.17 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.13,500

தரிசாக இருக்கும் நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்றவும், அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து சிறுதானியங்கள், பயறுவகைகள், விதைத்து அதை விளை நிலங்களாக மாற்ற ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500 மானியமும், நிலக்கடலை பயிருக்கு ரூ.22,900 மானியமும் வழங்கப்படுகிறது.

மானியம்

தரிசு நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன் செய்வதற்கும், உழவுப் பணி மேற்கொள்வதற்கும் விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட கலவைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல திட்டமாகும்.

சாகுபடி மேற்கொள்ளப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் தங்கள் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: Rs. 13,500 subsidy to convert barren lands into arable lands!
Published on: 22 September 2022, 09:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now