மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2021 11:04 PM IST
Credit : Times of India

நீர் பாசனத்துக்கு குழாய்கள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு தலா ரூ.15.000 மானியம் வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.

அரசு முடிவு (Government decision)

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகள் நிலமேம்பாட்டுக்குக்காக ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்த புதிய மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

மானியம் (Subsidy)

இதன்படி 2,000 விவசாயிகளுக்குத் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, குழாய்கள் வாங்குவதற்கான மானிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

விவசாயிகள் தேர்வு (Farmers select)

1,300 ஆதிதிராவிடர் மற்றும் 700 பழங்குடியின விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், தங்கள் வேளாண் நிலத்தில் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.3 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது.

நிதிப் பங்களிப்பு (Financial contribution)

இதில், ரூ.1.30 கோடி செலவினம் மத்திய அரசு நிதியிலிருந்தும், ரூ.1.70 கோடி செலவினம் மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!

கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

English Summary: Rs 15,000 subsidy for purchase of irrigation pipes - Government announcement!
Published on: 13 December 2021, 11:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now