Farm Info

Wednesday, 31 August 2022 11:23 PM , by: Elavarse Sivakumar

பழங்கள், காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் இருப்பதால், விண்ணப்பித்துப் பயனடையுமாறு, வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

உழவர்சந்தை

தென்காசியின் குத்துக்கல்வலசை கிராமத்தில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில் தகவல்

இதில், தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் பங்கேற்று, அரசின் மானியத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை வணிகத்திட்டங்கள் பி.எம். கிசான் திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.அப்போது விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும், அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல், உழவர்சந்தை விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்து உழவர்சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் எடுத்துரைத்தார். தென்காசி தோட்டக்கலை உதவி அலுவலர் பாலு தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கிக்கூறினார்.

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)