பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 27 January, 2022 9:49 AM IST

வறுமைக்கோட்டுக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, இந்திய சந்தைகளிலும் விலை நிர்ணயிக்கப்பட்டு வந்தது.

புதிய உச்சம் எட்டியது (The new peak has been reached)

இதனிடையே பெட்ரோல், டீசல் விலை, எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு விட்டுக்கொடுத்தது. இதன் பிறகு, பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தில் நின்றது.

ஆரம்பத்தில் சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி விலையை கிடுவிடுவென அதிகரித்த நிறுவனங்கள், சர்வதேச அளவில் கச்சாஎண்ணெய் விலைக் குறைந்தபோதும் விலையைக் குறைக்க மறுத்தன. விலை ஏற்றத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்வதாகக் காரணம் கற்பித்தன.

இதனால் வாகன ஓட்டிகள் பெரும் நிதிச்சுமையை எதிர்கொள்ள நேர்ந்தது.
எனவே பெட்ரோலுக்கு அரசு மானியம் தருமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மக்களின் மனதைக் கவரும் அறிவிப்பை ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

மானியம் அறிவிப்பு (Grant Notice)

இதுகுறித்து அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கூறியதாவது:-
வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் ஆதரவு திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் வழங்கப்படும். இதன்படி மாதந்தோறும் 10 லிட்டருக்கு ரூ.250 மானியமாக வழங்கப்படும். இந்த தொகை, பயனாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

73,000 விண்ணப்பங்கள்

இந்த மானிய உதவியைப் பெறுவதற்கு, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள் குறிப்பிட்ட ‘மொபைல் ஆப்’பில் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை 1.04 லட்சம் விண்ணப்பங்களில் 73 ஆயிரம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறினார்.

மேலும் படிக்க...

English Summary: Rs 250 subsidy for petrol - State Government announces!
Published on: 27 January 2022, 09:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now