Farm Info

Saturday, 13 November 2021 09:58 AM , by: Elavarse Sivakumar

கனமழையால் பாதிக்கப்பட்டுள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்று கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரங்கசாமி கூறியதாவது:

நிரம்பும் ஏரிகள்

புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாகப் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக 84 ஏரிகளில் 54 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பும் நிலையில் உள்ளது.

கனமழையால் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அரசு உணர்ந்திருக்கிறது.

விவசாயிகளுக்கு நிவாரணம்

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள், 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு, சேதமடைந்த 25 வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரமும், பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு தலா ரூ.20 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.

ரூ.5,000 நிவாரணம்

மேலும், இந்த கனமழை மற்றும் வெள்ளத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத்தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் குடும்ப அட்டைக்குத் தலா ரூ.5 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படும். மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து உரிய இழப்பீடு கேட்கப்படும்.

கால்நடை உயிரிழப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி மாடுகளுக்கு 10 ஆயிரமும், ஆடுகளுக்கு 5 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்.

செப்பனிடும் பணி (The task of shepherding)

கனமழையால் சேதமடைந்தச் சாலைகளைச் செப்பனிட ரூபாய் 100 கோடிக்கு மேல் டென்டர் விடப்பட்டுள்ளது. மழை காலம் முடிந்த பின் சாலைகள் முழுவதுமாக செப்பனிடும் பணி தொடங்கும்.

இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.

மேலும் படிக்க...

கொரோனா தடுப்பூசி போடவில்லையா? - இனி ரேஷன் பொருட்கள், கியாஸ், பெட்ரோல் கிடையாது!

புதியக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி- 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)