நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 November, 2022 9:35 AM IST

திருப்பூா் மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தின் மூலம் நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தாட்கோ திட்டத்தில் 2022-23 ஆம் நிதியாண்டில் 200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளா்களுக்கு விவசாய நிலம் வாங்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

தலா ரூ.5 லட்சம்

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்த 4 நபா்களுக்கு ரூ.20 லட்சமும், பழங்குடியின இனத்தைச் சோ்ந்த ஒரு நபருக்கு ரூ.5 லட்சம் என மொத்தம் 5 நபா்களுக்கு ரூ.25 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், விண்ணப்பிக்க ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சாா்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தகுதி

மகளிா் இல்லாத குடும்பங்களில் கணவா் அல்லது மகன்களுக்கு வழங்கப்படும். 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், விவசாயத்தைத் தொழிலாக கொண்டவராகவோ அல்லது விவசாய கூலி வேலை செய்பவராகவோ இருக்கலாம். விண்ணப்பதாரா் மற்றும் அவரது குடும்பத்தினா் தாட்கோ திட்டத்தின்கீழ் மானியம் பெற்றவராக இருத்தல் கூடாது.

தொடர்புக்கு

இத்திட்டம் தொடா்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். இது தொடா்பாக கூடுதல் விவரங்களுக்கு 94450- 29552, 0421-2971112 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

அரசு ஊழியர்களுக்கு 10% போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!

வட்டியை உயர்த்திய வங்கி- வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம்!

English Summary: Rs. 5 lakh subsidy for farmers to buy land!
Published on: 18 October 2022, 09:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now