மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 January, 2021 9:57 AM IST
Credit : Linkedin

மதுரை மாவட்டத்தில், விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம் செய்ய ஏதுவாக 100 ஹெக்டேருக்கு ரூ.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மானியம் (Subsidy)

மத்திய அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நான்கு வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

2020 - 21 ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மேலுார், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 100 எக்டேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.

2 ஏக்கரில் பண்ணை (Farm on 2 acres)

குறைந்தபட்சம் விவசாயிக்கு தலா 2 ஏக்கரில் பண்ணையம் அமைக்க ரூ.6 லட்சம் பெறலாம்.

  • நெல் போன்ற விவசாயப் பயிர்களுடன் கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் வனத்துறை பயிர்கள் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.

  • கால்நடை வளர்ப்பில் ஆடு, மாடு, கோழி மற்றும் தேனீ வளர்க்கலாம்.

  • தோட்டக்கலையில் பழ மரக்கன்றுகள் வழங்கப்படும்.

  • வனப் பயிர்களில் தேக்கு, வாகை போன்ற மரக்கன்றும் வழங்கப்படும்.

  • அனைத்திற்கும் சேர்த்து ரூ.6 லட்சம் மானியமாக தரப்படுகிறது.

எனவே விவசாய நிலத்தில் இதுபோல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!

வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?

பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!

 

English Summary: Rs 6 lakh grant to set up integrated farm
Published on: 30 January 2021, 09:57 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now