மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 September, 2020 7:01 PM IST

திருப்பூர் மாவட்டத்தில், பண்ணைக்குட்டை அமைக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க, 22.50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளைநிலத்தில் சேகரமாகும் மழைநீரை வீணாக்காமல், நிலத்துக்குள் செறிவூட்டும் விவசாயிகளை ஊக்குவிக்க , வேளாண் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தேசிய வேலை உறுதி திட்டத்தில், மண் வரப்பு அமைக்கும் பணிக்கும், தென்னை மரத்துக்கு பாத்தி அமைக்கும் பணிக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும் வேளாண்துறை மற்றும் தோட்டகலை துறை சார்பில், பண்ணை குட்டை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

ரூ.22.50 லட்சம் ஒதுக்கீடு (Fund Allocated)

திருப்பூர் மாவட்டத்துக்கு, 30 பண்ணைக்குட்டை அமைக்க, 22.50 லட்சம் ரூபாய், தோட்டக்கலை துறை ஒதுக்கியுள்ளது. பண்ணை குட்டை அமைப்பதற்கு ஆகும் 1.50 லட்சம் ரூபாய் செலவில், 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறுகையில்,'தாராபுரம், காங்கயம், மூலனுார், வெள்ளகோவில் ஒன்றியங்களுக்கு மூன்று, பிற ஒன்றியங்களுக்கு இரண்டு, பண்ணைக்குட்டை ஒதுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், 30 மீ., நீள, அகலத்தில், 3 மீ., ஆழத்தில், பண்ணைக்குட்டை அமைக்கலாம். பாலிதீன் உதவியுடன், தண்ணீர் சேகரிக்கும் வகையில், குட்டை வடிவமைக்கப்படும். தேங்கும் நீரை, மோட்டார் மூலம் உறிஞ்சி பயிர்களுக்கு பாய்ச்சலாம், என்றனர்.

மேலும் படிக்க....

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி

தட்கல் விவசாய மின் இணைப்பு - வரும் 21 முதல் அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

English Summary: Rs 75,000 subsidy to set up a farm pond - Call for farmers!
Published on: 22 September 2020, 07:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now