Farm Info

Wednesday, 03 November 2021 07:47 AM , by: Elavarse Sivakumar

விவசாய கிணறுகளில் டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.75 மானியம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு விவசாய முன்னேற்றக்கழக தலைவர் செல்லராஜாமணி, பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது :

டீசல் இன்ஜின் (Diesel engine)

தமிழகத்தில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு கிடைக்காமல் உள்ள ஏராளமான விவசாயிகள் டீசல் இன்ஜினை பயன்படுத்தி தண்ணீர் இரைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.

விவசாயக் கருவிகள் (Agricultural Tools)

மேலும் அனைத்து விவசாயத் தோட்டங்களிலும், டிராக்டர்கள், நாற்று நடும் இயந்திரம், களையெடுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு விவசாயக் கருவிகள் டீசலைப் பயன்படுத்தி இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டு வருகிறது. இதனால் அதிக விலை கொடுத்து டீசலை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் உற்பத்தி செலவு மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனா, இயற்கை சீற்றங்கள், விலை வீழ்ச்சி போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

மானியம் தேவை (Grant required)

எனவே, டீசல் இன்ஜின்களை பயன்படுத்தும் விவசாயிகளை அரசுத்துறை அலுவலர்கள் மூலம் கணக்கெடுத்து, புள்ளி விவரங்கள் அடிப்படையில் அவர்களுக்கென தனி அடையாள அட்டைகள் வழங்கி டீசல் இன்ஜின் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு மட்டும் ஒரு லிட்டர் டீசலுக்கு மத்திய, மாநில அரசுகள் குறைந்தபட்சம் ரூ.75 மானியம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதேவேளையில் டீசல் விலை தொடர்ந்து விலை உயர்ந்துகொண்டே இருப்பதால் டீசல் இன்ஜினை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பு கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும்.

அரசு பரிசீலிக்குமா?

அல்லது 100 சதவீதம் மானியத்துடன் சூரிய மின் மோட்டார் அமைக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலன்கருதி, இந்த கோரிக்கையை திமுக அரசு நிச்சயம் பரிசீலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

இதைச் செய்தால் போதும்- விவசாயத்தில் கூடுதல் வருமானம் உறுதி!

சம்பா பயிர் காப்பீடு - விவசாயிகளுக்கு அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)