சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 12 October, 2022 9:51 PM IST
Rs.20 thousand credited to farmers' bank accounts!

நெல், கரும்பு விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டிருப்பதாக அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த நடவடிக்கை விவசாயிகளை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

உற்பத்தி மானியம்

புதுச்சேரியில் நெல், கரும்பு விவசாயிகளுக்கான உற்பத்தி மானியம் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.20,000

இது குறித்து, புதுவை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தி மானியம் கடந்த ஆண்டு பெய்த பெருமழையினால் ஏற்பட்ட பயிர் பாதிப்பு எக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வீதம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தபடி ஏற்கனவே நெல் மற்றும் காய்கறி பயிர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

வங்கிக்கணக்கில் வரவு

தற்போது கரும்பு மற்றும் பப்பாளி சாகுபடி செய்த 871 விவசாயிகளுக்கு ரூ.93 லட்சத்து 24 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.
மேலும் இந்த ஆண்டு நவரை நெல் சாகுபடி செய்த அட்டவணைப் பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

நெல் விவசாயிகள் அதன்படி சொர்ணாவாரி பருவத்தில் நெல் சாகுபடி செய்யாமல் இந்த ஆண்டு நவரை பருவத்தில் நெல் சாகுபடி செய்த 200 புதுச்சேரி அட்டவணை பிரிவு விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் வீதம் ரூ.15 லட்சத்து 49 ஆயிரம் அவர்களது வங்கிக்கணக்கில் இப்போது செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!

ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!

English Summary: Rs.20 thousand credited to farmers' bank accounts!
Published on: 12 October 2022, 09:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now