Farm Info

Wednesday, 20 July 2022 08:23 AM , by: Elavarse Sivakumar

விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் மான் ஜன் யோஜனாத் திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. எனவே தகுதியான விவசாயிகள் இந்தத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதனைத் தெரிந்துகொண்டு, தவறாமல் விண்ணப்பிக்குமாறு அனைத்து விவசாயிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மான் தன் யோஜனா திட்டம் (PM Kisan Maan Dhan Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்சன் வழங்குவதுதான், இந்தத்திட்டத்தின் நோக்கம்.

தகுதி

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் கிசான் பென்சன் திட்டத்தில் இணைவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்துக்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை கூட்டணி அமைத்துள்ளது.

மாதம் ரூ.3,000

கிசான் பென்சன் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை தொட்டபின் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுவொரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு பென்சன் திட்டம். 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் கிசான் பென்சன் திட்டத்தில் இணையலாம்.

பிரிமியம்

மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வர வேண்டும். 60 வயதை தொட்டபின் மாதம் தோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

யாருக்கு கிடைக்காது?

எனினும், தேசிய பென்சன் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம், தொழிலாளர் நிதி அமைப்பு திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கிசான் பென்சன் கிடைக்காது.

மேலும் படிக்க...

15 லட்சம் ரூபாய் செலவில் விவசாயிக்கு சிலை!!!

ரூ.63,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலைவாயப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)