நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2022 4:30 PM IST

மத்திய அரசு வழங்கும் 6,000ரூபாயைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த இணைப்பைச் செய்யாதவர்களுக்கு அந்த நிதியுதவி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது

பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும், தலா 6,000 ரூபாய் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

வங்கிக்கணக்கில்

இந்த தொகை 3 தவணைகளாக தலா 2,000 ரூபாய் வீதம் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த தொகை,விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக அனுப்பப்படுகிறது. மத்திய அரசின் இந்த நிதியுதவியைப் பெறுவதற்கு விவசாயிகளுக்கு தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தகுதிபெற்ற விவசாயிகள், இதற்கென நிர்வகிக்கப்படும் இணையதளத்தில், தங்கள் விபரங்களைப் பூர்த்தி செய்து முன்பதிவு செய்துகொள்ளவேண்டியது கட்டாயம்.

13-வது தவணைக்காக

குறிப்பாக, அந்த முன்பதிவுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது. இந்தத்திட்டத்தின் கீழ் இதுவரை, 12 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

சிக்கல்

இந்நிலையில், ஆதார் எண்ணை இதுவரை இணைக்காத 9 லட்சம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 உதவித் தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித் தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புக்கு

விவசாயிகள் தங்ளது ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Toll Free Number: 18001155266
Helpline Number:155261
new helpline: 011-24300606, 0120-6025109
011-23381092 (Direct Help Line).

மேலும் படிக்க...

ஆதார் அட்டைதாரர்களுக்கு ரூ.4.78 லட்சம்- விபரம் உள்ளே!

ஜெயலலிதா மரணம்: விசாரிக்கிறதா சிபிஐ?- சிக்குகிறார்கள் அவர்கள்!

English Summary: RS.6000 Central Govt Fund – Contact these numbers to avail!
Published on: 23 November 2022, 09:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now