Farm Info

Tuesday, 12 October 2021 10:09 AM , by: Elavarse Sivakumar

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வட்டார விவசாயிகள், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு காப்பீடு செய்து பயன்பெறுமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.

சம்பா சாகுபடி (Samba cultivation)

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா பருவ நெற்பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

பயிர் காப்பீட்டு திட்டம் (Crop Insurance Scheme)

இது தொடர்பாக வேளாண்மை உதவி இயக்குநர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

திருமயம் வட்டார விவசாயிகளுக்கு இந்த ஆண்டு, எதிர்பாராமல் ஏற்படும் சேதங்களுக்கு, இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடையப் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும், புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பருவம் தவறிப் பெய்யும் மழை, கடும் வறட்சி மற்றும் அதிகப்படியான பெரும் மழையினால் ஏற்படும் இழப்பினை இத்திட்டத்தின் மூலம் ஈடுகட்ட முடியும். இவ்வாண்டு சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.31000/மும், விவசாயிகள் பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு ரூ.465/மும்- செலுத்த வேண்டும்.

ஆகவே விவசாயிகள் அனைவரும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் பயிர் காப்பீட்டுத் தொகையினை செலுத்தி காப்பீடு செய்யலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்(Documents required)

  • பட்டா

  • சிட்டா

  • அடங்கல்

  • ஆதார் அட்டை நகல்

  • வங்கிக்கணக்குப் புத்தகத்தின் நகல்

  • முன்மொழிவுப் படிவம்

மேற்கூறிய இந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைத்து, பயிர் காப்பீட்டிற்காகப் பதிவு செய்ய வேண்டும்.

காலக்கெடு (Deadline)

நெற் பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 15ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆகவே கடைசிநாள் வரை காத்திராமல் உடனடியாக பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால், உதவிக்கு தங்கள் பகுதி உதவி வேளாண் அலுவலர்களை அணுகிப் பயன் பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நெற்பயிரில் இயற்கை வழி பூச்சி மேலாண்மை!

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)