மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 August, 2022 8:48 PM IST
கடல்சார் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையானவை எனக் கூறப்பட்டாலும், அதில் முக்கியமான உணவு என்றால் அவை மீன்கள்தான். அசைவ விரும்பிகளாக இருந்தால், தவறாமல், மீன் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்குகிறார்கள் மருத்துவர்கள்.

அந்த வகையில், மீன்வளர்ப்போருக்கு பல உதவிகளைச் செய்வதால், நாம்
மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்களை பயன்படுத்தி, விவசாயிகள் மீன் வளர்த்து லாபம் பெறலாம்.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1.2 லட்சம் ரூபாய்

உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, பல்நோக்கு பண்ணை குட்டையில் மீன் வளர்ப்போருக்கு அரசு ஒரு யூனிட்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. பிரதமர் மீன் வள மேம்பாட்டுத்திட்டம் 2021- 22ம் ஆண்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 டன் திறன் கொண்ட குளிர் சேமிப்பகங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலைய கட்டுமானங்கள் அமைக்க, 16 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்போருக்கு, 40 சதவீதம் மானியத்தை அரசு வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.

தகுதி

பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 சதவீதம் மானியம் உண்டு. உயிர் மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானியம், அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குளிர் காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைக்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியமும், பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்த்து பயன் பெறலாம்.விருப்பம் உள்ளவர்கள், மீன் வள ஆய்வாளரை 96555 06422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நீலகிரியில் பூத்துக்குலுங்கும் பச்சை ரோஜாக்கள்!!

பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்த பெண்ணுக்கு விருது!

English Summary: Scheme to give Rs 1.2 lakh subsidy to farmers!
Published on: 14 August 2022, 08:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now