நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 September, 2022 11:43 AM IST
Seed Selection

தரமான விதைத்தேர்வே மகசூல் வெற்றிக்கு வழிகாட்டும். நெற்பயிரில் விதை தேர்வும் விதைநேர்த்தி முறைகளும் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான பதர்களை நீக்குவதற்கு உப்புக்கரைசல் முறையை பயன்படுத்தலாம்.

விதைத் தேர்வு (Seed Selection)

பாத்திரத்தில் விதைகள் மூழ்குமளவு தண்ணீர் ஊற்றி ஒரு கோழிமுட்டையை மெல்ல சேர்க்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக உப்பு சேர்த்து முட்டை மேலே மிதக்க ஆரம்பித்தவுடன் முட்டையை எடுத்து விட்டு தண்ணீருள்ள மற்றொரு பாத்திரத்தில் விதைகளை கொட்ட வேண்டும். தரமான விதைகள் நீரில் மூழ்கி விடும். இவற்றின் உப்புத்தன்மை நீங்கும் வரை 3 முறை கழுவ வேண்டும்.

மூன்றுவித பரிசோதனைகளின் மூலம் முளைப்புத்திறனை விவசாயிகள் நேரடியாக பரிசோதிக்கலாம். வெள்ளைத் துணியில் ஒரு கைப்பிடி விதைகளை கட்டி 12 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து அடுத்த ஒருநாள் முழுவதும் இருட்டறையில் வைக்க வேண்டும். 3 ஆம் நாளில் எத்தனை விதைகள் முளைத்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். 2வது பரிசோதனையில் விதைகளை ஒருநிமிடம் தண்ணீரில் மூழ்க விட வேண்டும். வைக்கோலை திரித்து பாய் போல் செய்து விதைகளை பாயின் இடையில் வைத்து சுருட்டி கட்ட வேண்டும்.

24 மணி நேரம் கழித்து முளைத்த விதைகளை கணக்கிட வேண்டும். 3வது பரிசோதனையில் ஈரமான சாக்குப்பையை மடித்து விதைகளை மடிப்புக்கு இடையே வைத்து ஒருநாள் முழுவதும் இருட்டறையில் வைத்து மறுநாள் முளைப்புத்திறனை கண்டறிய வேண்டும்.
மதுரை நாகமலை புதுக்கோட்டை விதைப் பரிசோதனை நிலையத்தில் விதைகளின் முளைப்புத்திறன் பரிசோதனை செய்வதற்கு கட்டணம் ரூ.80.

தொடர்புக்கு

மகாலட்சுமி, விதைப்பரிசோதனை அலுவலர்
ராமலட்சுமி, கமலாராணி, வேளாண் அலுவலர்கள் விதைப் பரிசோதனை நிலையம்
நாகமலை, புதுக்கோட்டை,
மதுரை
94873 48707

மேலும் படிக்க

உலக தேங்காய் தினம்: குஜராத்தில் சிறப்பு நிகழ்ச்சி!

உலகின் நீளமான வெள்ளரிக்காய்: கின்னஸில் இடம்பிடித்த விவசாயி!

English Summary: Seed selection is very important to maximize yield!
Published on: 02 September 2022, 11:43 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now