மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2022 8:10 PM IST
Soilless farming: Low cost vegetable cultivation!

விவசாயத்தை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல பல தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில், அதிக மகசூலைப் பெறவதற்கான வழிமுறைகளை, விவசாயிகளுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றனர் வேளாண் அதிகாரிகள். இயற்கை உரங்களை கையாள்வது குறித்தும், மகசூலை அதிகரிக்கும் நுட்பங்கள் குறித்தும் பல விதமான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பல விவசாயிகள் செயற்கை உரங்களைத் தவிர்த்து, இயற்கை உரங்களை கையாள முன்வருகின்றனர்.

இந்நிலையில் மண்ணில்லாமல், தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்யும் ஹைட்ரோபோனிக்ஸ் முறைக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விவசாயம் செய்ய நினைக்கும் நிலமில்லாதோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.

ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics)

தண்ணீர் வழியாக அல்லது காற்றில் உள்ள ஈரப்பதம் வழியாக உணவுப் பொருட்களை, விளையச் செய்வதே ஹைட்ரோபோனிக்ஸ் எனப்படும் மண்ணில்லா சாகுபடி முறை. இதன் மூலமாக, வளரும் பயிர்களின் தண்ணீர்த் தேவையை 70% வரை குறைக்க முடியும். அதோடு, நிலம் மற்றும் மண் தேவையும் குறைகிறது. மண்ணில்லா விவசாயம் மூலமாக, செங்குத்து அல்லது பல்லடுக்கு பண்ணைய முறையில், காய்கறி உற்பத்தியை 10 மடங்கு அதிகரிக்க செய்கிறது.

செங்குத்து இடைவெளியைப் உபயோகப்படுத்தி, அடுக்கு முறைகளில் பயிர்களை மிக எளிதாக விளைவிக்கலாம். பசுமை குடிலில் இருப்பது போல ஒளி, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் மற்றும் கரியமில வாயு உட்பட அனைத்து வானிலை காரணிகளையும், செங்குத்து இடைவெளி முறையில் கட்டுப்படுத்தலாம். சமமான தளத்தில் பயிரிட்டால், பயிர்களுக்கு குறைந்த அளவிலான சூரிய ஒளியே கிடைக்கும். அதுவே, செங்குத்து முறையில் பயிரிட்டால் அதிக அளவிலான சூரியஒளி கிடைக்கும். இதனால், உற்பத்தி திறனும் அதிகரிக்கும்.

செங்குத்து பண்ணைய முறை (Vertical farm system)

பாலைவனம், மலையோர நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் பலதரப்பட்ட காய்கறிகளை விளைவிக்க, செங்குத்து பண்ணைய முறை தான் அதிகளவு கைகொடுக்கிறது. நிலப் பயன்பாட்டினை அதிகரிக்கச் செய்து, இயற்கை வளங்களை பாதுகாக்கவும் செய்கிறது. உணவு உற்பத்தியும், நுகர்வும் ஒரே இடத்தில் நிகழ்வதால் மிக எளிதான விவசாய தொழில்நுட்ப முறையாக, மண்ணில்லா விவசாயம் பார்க்கப்படுகிறது.

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் விவசாயம் செய்ய, குறைந்த செலவே ஆகிறது. இருப்பினும், மகசூல் அதிகளவில் கிடைப்பதால், தற்போது மண்ணல்லா விவசாய முறைக்கு வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க

தேங்காய் விலை கடும் சரிவு: கவலையில் விவசாயிகள்!

இயற்கை முறை தேயிலை சாகுபடி: சுற்றுலாப் பயணிகளின் ரசிக்கும் கொழுக்கு மலை!

English Summary: Soilless farming: Low cost vegetable cultivation!
Published on: 11 May 2022, 08:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now