மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2022 7:07 PM IST
Subsidized inputs for farmers

விழுப்புரம் மாவட்டத்தில் புரதச்சத்து அதிகம் உள்ள பயறு வகைகளின் சாகுபடியை அதிகரிக்க நடப்பாண்டில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், பயறு வகைகள் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருட்கள் வழங்கிட ரூ. 1 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது. 2021-22-ம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் 33, 100 எக்டர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

விதைகள் விநியோகம் (Seeds distribution)

நடப்பாண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயறு விதைகள் சாகுபடி இலக்கு 50,500 எக்டர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயறு வகைகள் சாகுபடி பரப்பை அதிகரிக்க இத்திட்டத்தின் கீழ் 1,500 எக்டர் பரப்பளவில் கிலோ ஒன்றுக்கு ரூ. 50 வீதம் விதை மானியத்தில் 30 மெட்ரிக் டன் உளுந்து விதைகள் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்பட்ட 76 மெட்ரிக் டன் உளுந்து விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு ரூ. 25 மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது. இதை வட்டாரங்களுக்கு பகிர்ந்தளித்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மானியம் (Subsidy)

உயிர் உரம் 3,398 எக்டருக்கும், நுண்ணூட்டக்கலவை உரம் 700 எக்டருக்கும் 50 சதவீத மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. பயிர் பாதுகாப்பு மருந்து விநியோகத்திற்கு, பின்னேற்பு மானியமாக 400 எக்டருக்கு 50 சதவீத மானியம் வழங்கப்பட உள்ளது. மேலும் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு சுழற்கலப்பை ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 42 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு ரூ. 34 ஆயிரம் அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.

பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு பெண் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 3,800 அல்லது 50 சதவீத மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு ரூ. 3,000 அல்லது 50 சதவீத மானியத்திலும் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற, உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயறுவகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் உரிய ஆவணங்களை தங்கள் பகுதி வேளாண்மை விரிவாக்க மையங்களில் சமர்ப்பித்து பயன் பெறலாம்.

மேலும் படிக்க

தரமான விதைநெல் வேண்டுமா? இவர்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!

பசு கோமியத்தை வாங்கும் மாநில அரசு: கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி!

English Summary: Subsidized inputs for farmers: Rs. 1 crore allocation!
Published on: 19 July 2022, 07:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now