Farm Info

Wednesday, 13 October 2021 08:30 AM , by: Elavarse Sivakumar

Credit : opolov.in

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற மானியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு விவசாயப் பெருமக்களை வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தரிசு நில மேம்பாடுத் திட்டம் (Barren Land Development Project)

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டாரத்தில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

3 ஆண்டுகளுக்கு மேல் (More than 3 years)

இதில் மூன்று ஆண்டுகளுக்குமேல் இருக்கும் தரிசாக தரிசு நிலங்களைச் சாகுபடிக்குக் கொண்டு வரலாம்.

இராஜபாளையம் வட்டாரத்தில் குறிச்சியார்பட்டி, ஜமீன் நத்தம்பட்டி, கிழவிகுளம், தெற்கு வெங்கா நல்லூர், வடக்கு தேவதானம், தெற்கு தேவதானம் மற்றும் ஜமீன் நல்லமங்களம் கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

ஹெக்டேருக்கு ரூ.13,000( Rs.13,000 - per hectare)

இதில் தரிசாக உள்ளப் புதர்களை அகற்றவும், நிலத்தைச் சமன்படுத்தவும், உழவு செய்யவும், சாகுபடி செய்யவும், ஹெக்டேருக்கு ரூ.13,000/- மேலாக மானியம் வழங்கப் படுகிறது.

வேண்டுகோள் (Request)

இக்கிராமங்களில் தரிசாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் உடனடியாக அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு தரிசு நிலங்களை சரி செய்து சாகுபடிக்கு கொண்டு வர வேண்டும் என இராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் தி.சுப்பையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் படிக்க...

பருத்தியில் பளிச் லாபம் ஈட்ட- ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு!

விவசாயிகளுக்கு 5 லட்சம் மானியம்- காட்டுத்தீ போல பரவும் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)