மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 May, 2021 8:13 AM IST
Credit: Isha Foundation

சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் மானியத்தை, விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தேசிய அளவிலானத் திட்டம் (National level plan)

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மானியம் வழங்கப்படுகிறது.

மானியம் (Subsidy)

இது குறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில்,

மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில், பயறு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், உளுந்து விதை வாங்க, கிலோவுக்கு, ரூ.30 அல்லது விற்பனை விலையில், 50 சதவீதம் எது குறைவோ, அந்த அளவுக்கு மானியம் வழங்கப்படும்.

அதிகாரிகள் தகவல் (Officials informed)

இதேபோல் கம்பு, ராகி, சாமை, குதிரைவாலி, தினை உள்ளிட்ட சிறுதானிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், கிலோவுக்கு, 30 ரூபாய், நிலக்கடலை சாகுபடி செய்ய, 40 ரூபாய் மானியம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் உயிர் உரத்துக்கு, ஹெக்டேருக்கு ரூ.150, நுண்ணூட்டம் வழங்க, ரூ.500 மானியம் வழங்கப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

சிறு தானியங்களின் முக்கியத்துவம் (The importance of small grains)

 சிறுதானியங்களை அதிக அளவு உட்கொள்வது உடலில் உள்ள டிரைகிளிசரைடுகளின் அளவினைக் குறைக்க உதவி செய்கிறது.

திரவ நிலையில் (In the liquid state)

சிறுதானியங்கள் ரத்தத் தட்டை அணுக்கள் தடிமன் ஆவதைத் தடுத்து ரத்தத்தை திரவ நிலையிலேயே வைத்துக் கொள்ள உதவுகிறது.

வாதம் (Paralytic attack)

இதனால் வாதம் மற்றும் கரோனரி தமனி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகிறது.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

தமிழகத்தில் முதல்முறையாக சீமைக்கருவேல செடிகளை அழிக்க ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு!

English Summary: Subsidy for small grain seeds - Call for farmers!
Published on: 13 May 2021, 08:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now