மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 February, 2022 8:06 PM IST
Subsidy to Farmers

மதுரை மாவட்டத்தில் சேக்கிபட்டி, மதிப்பனுார், கிடாரிபட்டி விவசாயிகளுக்கு நபார்டு வங்கியின் மண்வள மேம்பாட்டு திட்டம் மூலம் விவசாய, தொழில்நுட்ப ஆலோசனைகள், மானியம் (Subsidy) வழங்கப்படுகிறது. இதுகுறித்து நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன் கூறியதாவது: 2021 - 22 ம் ஆண்டில் இந்த திட்டம் துவங்கப்பட்டு 2024 ல் முடிகிறது.

இம்மானியத்தின் திட்ட மதிப்பீடு ரூ.53 லட்சம். நபார்டு வங்கியின் பங்கு ரூ.44 லட்சம்; விவசாயிகளின் பங்களிப்பு ரூ.9 லட்சம். மூன்று கிராமங்களில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பது, கட்டுப்படுத்துவது மற்றும் காலநிலை தழுவல் ஆகியவை இந்திய வேளாண்மை வளர்ச்சி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

கோடை உழவு (Summer Farming)

இந்தாண்டு சேக்கிபட்டி விவசாயிகளின் 300 ஏக்கரில் இலவசமாக கோடை உழவு செய்துள்ளோம். ஐந்து பண்ணை குட்டைகள் அமைத்துள்ளோம். தேனீ வளர்ப்பு, ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி நடத்தி உள்ளோம். இலவசமாக காய்கறி விதைகள் (Vegetable Seeds) வழங்கியுள்ளோம். இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க இயற்கை பூச்சிக்கொல்லி, உரம் இலவசமாக தருகிறோம்.

மூன்றாண்டு முடிவில் விவசாய நிலத்தில் மண் மற்றும் நீர் வளத்தை பெருக்குவது, பருவநிலை மாற்றத்திற்கு ஏற்றாற்போல விவசாயிகளே விவசாயத்தை சீரமைப்பது தான் என்றார்.

மேலும் படிக்க

நெற்பயிாில் கதிர்நாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி மலர்கள்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

English Summary: Subsidy to farmers through soil scheme!
Published on: 24 February 2022, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now