Farm Info

Tuesday, 09 November 2021 07:59 AM , by: Elavarse Sivakumar

Credit : Boldsky Tamil

நம் நாட்டில் எண்ணெய் உற்பத்திக்கு மானியம் வழங்கி விவசாயிகள் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கத்தலைவர் நல்லசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இறக்குமதி மானியம் (Import subsidy)

விவசாய விளைபொருட்களுக்கு நல்ல விலைக் கிடைக்காத நிலையில், வெளிநாடுகளில் இருந்து. 70 சதவீதம் எண்ணெய், 50 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு மானியம் வழங்குவதால், விவசாயிகளுக்கு பயனும் இல்லை.

எனவே நம் நாட்டில் எண்ணெய் மற்றும், பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு, மானியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

வாழ்வாதாரம் உயராது (Livelihoods will not rise)

அவற்றை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும். இறக்குமதிக் கொள்கையை மாற்றாத வரை, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராது. பிற உரங்களின் விலை, 50 கிலோவுக்கு, 1,000 ரூபாய் வரை உள்ள நிலையில், யூரியா 300 ரூபாய்க்கு விற்கிறது. விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக விளைச்சல் அதிகரிக்காது.

லஞ்சம்

பயிரில் நோய் தாக்குதல் ஏற்படும். இந்த விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும். அரசு கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை.

நோய் பரவல் குறையும் (The spread of the disease will decrease)

லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு, பாராட்டு விழா நடத்தத் தயாராக இருக்கிறோம் ஆனால் கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை வழங்கும் போதுதான், நோய் பரவல் குறையும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதன் மூலம், மருத்துவர் தேவை குறையும். இதன் மூலம், 'நீட்' தேர்வு அவசியமில்லாததாக மாறிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க....

கரிசனம் காட்டாத கனமழை- வெள்ளத்தில் மூழ்கிய 5,500 ஏக்கர் நெற்பயிர்கள் !

4 நாட்களுக்கு மிக கனமழை - சென்னைக்கு ரெட் அலேர்ட்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)