நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 November, 2021 8:44 PM IST
Credit: IndiaMART

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைக் கருத்தில்கொண்டு, குறுவை நெல்லைப் பாதுகாக்க 50% மானியத்தில் தார்பாய்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்துறை அறிவித்துள்ளது.

தொடரும் பருவமழை (Continuing monsoon)

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனிடையே குறுவை நெல் கொள்முதல் பணிகளும் நடைபெற்று வருகிறது.

50% மானியத்தில் (50% on subsidy)

இதையடுத்து, அறுவடை செய்யப்பட்ட குறுவை நெல்லை விவசாயிகள் பாதுகாக்க ஏதுவாக, 50 சதவிகித மானிய விலையில் தார்பாய்கள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்திருப்பது:

மாவட்டத்தில் நடவு செய்யப்பட்ட குறுவை நெல் தற்போது அறுவடைக்கு வந்த நிலையில் தொடர் மழையாலும், விட்டுவிட்டு மழை பெய்வதாலும் நெல்லை பாதுகாக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

தார்பாய்கள் (Tarpaulins)

எனவே, அறுவடை செய்த குறுவை நெல்லை மழையிலிருந்து பாதுகாக்க வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நிகழாண்டு 1,100 தார்பாய்கள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு (Contact)

எனவே, விவசாயிகள் தங்களுக்குத் தேவையான தார்பாய்களை 50 சதவிகித மானியத்தில் பெற்று பயனடைய தொடர்புடைய வட்டாரங்களில் உள்ள வேளாண் உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

குறுவை நெல் கொள்முதல் பணிகள்- விரைவாக முடிக்க முதலமைச்சர் உத்தரவு!

கட்டணம் வசூலித்தால், கல்லூரி உரிமம் ரத்து- பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை!

English Summary: Tarpaulins at 50% subsidy to protect paddy!
Published on: 09 October 2021, 07:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now