Farm Info

Monday, 05 June 2023 07:58 PM , by: Muthukrishnan Murugan

the effects of fertilizers on the growth of malabar spinach

பசலை கீரை என்பது பொதுவாக படரும் கொடிவகையினை சார்ந்தது. இவை அதன் மருத்துவ பண்புகளுக்காக உணவில் பயன்படுத்தப்படுகிறது.

பசலைக்கீரைகள் பொதுவாக உண்மையில் கீரை வகையினை சார்ந்தது அல்ல என அறியப்படுகிறது. பசலை கீரையினை தோட்டத்தில் பலரும் வளர்த்து வரும் நிலையில் உணவுத்தேவைக்காக அதிகளவு சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது.

பசலைக்கீரையில் பல வகைகள் இருப்பினும், கொடிப்பசலை, தரைப்பசலை, சிறுபசலை, செடி பசலை போன்ற இனங்கள் மட்டும் தான் பெரும்பாலும் மருத்துவம் மற்றும் சமையலின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பாசெல்லசி குடும்பத்தைச் சேர்ந்த பசலைக்கீரையினது தாவரங்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிப்பதில் உரங்கள் குறிப்பிடத்தக்க பங்கினை வழங்குகின்றன.

ஊட்டச்சத்து கிடைக்கும் தன்மை:

பசலை கீரையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் (N), பாஸ்பரஸ் (P), பொட்டாசியம் (K) போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உரங்கள் வழங்குகின்றன. இலை மற்றும் தண்டு வளர்ச்சிக்கு நைட்ரஜன் உதவுகிறது, பாஸ்பரஸ், வேர் வளர்ச்சி மற்றும் பூக்கும் தன்மையினை ஊக்குவிக்கிறது, மேலும் பொட்டாசியம் ஒட்டுமொத்த தாவர வீரியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கிறது.

தாவர அளவு அதிகரிப்பு:

உரங்களானது பசலை கீரைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெரிய மற்றும் ஆரோக்கியமான இலைகள், தண்டுகள் மற்றும் வேர்களை உருவாக்குகின்றன. போதுமான ஊட்டச் சத்து கிடைப்பது தாவரத்தின் அளவை அதிகரிக்கச் செய்வதுடன் தாவரமானது அதிக சூரிய ஒளியை தாக்குப்பிடிப்பதுடன், ஒளிச்சேர்க்கையை மிகவும் திறமையாக மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது.

இலை உற்பத்தி:

குறிப்பாக நைட்ரஜன் அதிகம் உள்ள உரங்கள் பசலைக் கீரையில் இலை உற்பத்தியைத் தூண்டும். நைட்ரஜன் குளோரோபிலின் ஒரு முக்கிய அங்கமாகும், இது ஒளிச்சேர்க்கைக்கு காரணமான நிறமியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோய் எதிர்ப்பு:

நன்கு ஊட்டச்சத்து மிகுந்த தாவரங்கள் பொதுவாக நோய்கள் மற்றும் பூச்சிகளை எதிர்க்கும். உரங்கள், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம், பசலைக் கீரையின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, பல்வேறு நோய்கள் அல்லது பூச்சித் தொல்லைகளைத் தாங்கி வளரும் திறனை மேம்படுத்தும்.

உரங்களானது தாவரங்களின் வளர்ச்சியையும், விளைச்சலையும் கணிசமாக அதிகரிக்கும் அதே வேளையில், அவை கவனமாகவும் பரிந்துரைக்கப்பட்ட பயன்பாட்டு விகிதங்களுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க. உரங்களின் அதிகப்படியான பயன்பாடு அல்லது முறையற்ற பயன்பாடு ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் மண் ஆரோக்கியத்தில் தீங்கு விளைவிக்கும். 

சரியான உர வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பசலை கீரை சாகுபடிக்கு பொருத்தமான ஊட்டச்சத்து மிகுந்த உரத்தினை வழங்குவதை உறுதி செய்ய மண் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது.

மேலும் காண்க:

மாங்காய் இஞ்சி சுயமா பயன்படுத்துறீங்களா? கவனமா இருங்க..

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)