மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 October, 2021 12:13 PM IST
The price of onion has gone up by Rs. 15 because of income tax ride !

வியாபாரிகள் மீதான வருமான வரி சோதனையால் வெங்காயத்தின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 வரை சரிந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவின் பிம்பால்கான் மண்டியில் பணிபுரியும் வணிகர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியது. மும்பையில் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ. 15 வரை குறைந்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கிலோ 45 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் இன்று வெங்காய வரத்து 100 குவிண்டால்களை எட்டியுள்ளது. இந்நிலையில், தற்போது இதன் விலை மேலும் குறையலாம் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பிம்பால்கான் பஸ்வந்த் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவில் உள்ள 6 வெங்காய வியாபாரிகளின் 13 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வணிகர்களின் அலுவலகங்கள் மற்றும் வங்கி கணக்குகளை சோதனை செய்தனர். இதையடுத்து வருமான வரித்துறையினர் பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களின் விற்பனை மற்றும் பில் புத்தகங்கள் போன்றவை தேடப்பட்டன. இந்த நடவடிக்கையால் சந்தை கட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை?

கனமழையால் வயலில் பயிரிடப்பட்டிருந்த வெங்காயச் செடிகள் சேதமடைந்துள்ளன. மறுபுறம், மாறிய வானிலை காரணமாக கோடையில் சேமிக்கப்படும் வெங்காயத்தையும் பாதிக்கிறது. இதனால் வெங்காயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இது உள்நாட்டு தேவைக்கும் வழங்கலுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது.

இதனால் தீபாவளியை முன்னிட்டு சில்லரை சந்தையில் வெங்காயத்தின் விலை விண்ணைத் தொட்டு வருகிறது. ஆனால் தற்போது வருமான வரித்துறையின் அதிரடி நடவடிக்கையால் வெங்காயச் சந்தை முன்பை விட கட்டுக்குள் வந்துள்ளது. வெங்காய வியாபாரிகள் இருப்புக்களை பதுக்கி வைத்து விலையை உயர்த்தியதாக தெரிகிறது.

வெங்காய உற்பத்தியாளர்கள்

மகாராஷ்டிரா மாநில வெங்காய உற்பத்தியாளர் அமைப்பின் நிறுவனர் தலைவர் பாரத் டிகோல் கூறுகையில், வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருமான வரித்துறைக்கு முழு உரிமை உள்ளது. பதுக்கி வைத்து விலையை உயர்த்தும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் இனி வியாபாரிகளை நம்பி விற்பனை செய்ய மாட்டார்கள் என்று டிகோல் கூறுகிறார். விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் நேரடி விற்பனைக்கு திட்டமிட்டுள்ளனர். வியாபாரிகளால், இருவரும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

மேலும் படிக்க:

விலை கிடைக்காத சின்ன வெங்காயம்- விதை வாங்கி பயன்படுத்த அறிவுறுத்தல்!

English Summary: The price of onion has gone up by Rs. 15 because of income tax ride !
Published on: 26 October 2021, 12:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now