சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 22 May, 2021 8:05 PM IST
Agri inputs
Credit : Agriculture

கொரோனா ஊரடங்கு காலத்தில் வேளாண் இடுபொருட்கள் (Agri Inputs) தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

மானிய விலை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு சொர்ணாவரி பட்டத்தில் தோராயமாக 10 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி (Paddy Cultivation) செய்யப்பட்டுள்ளது. வேளாண் இடு பொருட்களான விதை நெல், பயிர் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாய பொருட்கள் தங்களுக்கு தேவையான புதிய ரக நெல் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் நுண்ணூட்ட கலவை அந்தந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் மானிய விலையில் பெற்று கொள்ளலாம்.

இருப்பு விவரம்

எஸ்.ஆர்.ஐ, முறையில் நெல் நடவு செய்து விவசாயிகள் இரட்டிப்பு மகசூல் (Yield) பெற கேட்டு கொள்ளப்படுகிறது. மாவட்டத்தில் தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை மையங்களிலும் போதுமான அளவு விதைநெல் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது அனைத்து அரசு வேளாண்மை விரிவாக்க மையங்களில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், தனியார் விற்பனை மையங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் விற்பனை நடைபெறும். தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பு விவரம் அடங்கிய தகவல் பலகைகள் வைக்கவும் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடுமையான நடவடிக்கை

டி.ஏ.பி. உரம் மூட்டை ரூ. 1600 வீதம் விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் தங்கள் சாகுபடி தொடர்பான அனைத்து தகவல்களையும் கீழ்கண்டவாறு தங்கள் வட்டார உதவி இயக்குனர்களின் தொலைபேசி எண்கள் வாட்ஸ்அப் (Whatsapp) மூலம் தெரிந்து கொண்டு தகுந்த சேவைகளை பெற்றுக்கொள்ளுமாறு அதில் கூறப்பட்டிருந்தது.

காட்டாங்கொளத்தூர்-9363202221.
சிட்லபாக்கம்-9363202221,
திருப்போரூர்-9363202221,
திருக்கழுக்குன்றம்-8925629457,
மதுராந்தகம்-9894781887,
அச்சரப்பாக்கம்-8940905083,
பவுஞ்சூர்-9952916247,
சித்தாமூர்-8056198593.

மேலும் படிக்க

கொரோனா ஊரடங்கால் டன் கணக்கில் வீணாகிறது முல்லைப் பூக்கள்!

தென்னை விவசாயத்தைச் சேர்ந்த 10,000 பேர் வேலையிழப்பு!

English Summary: The way to make agricultural inputs unrestricted in curfew! Official Information
Published on: 22 May 2021, 08:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now