மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 January, 2022 8:53 AM IST

கோடை காலம் நெருங்கிவிட்டநிலையில், வெப்பத்தைத் தணிக்க உதவும் இளநீரை, வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்துக் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யத் தொடங்கிவிட்டனர். இதனால் தென்னை விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், ஒரு லட்சத்து, 45 ஆயிரம் ஏக்கரில் தென்னை சாகுபடி பரப்பு உள்ளது. இதில், இளநீர் சாகுபடிக்கான, வீரிய ஒட்டுரக தென்னை, 3.2 லட்சம் மரங்கள் உள்ளன.பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் சாகுபடியாகும் இளநீர் சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

பிற மாநிலங்களுக்கும் (To other states)

அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் பகுதிகளுக்கும் விற்பனைக்காகக் கொண்டுசெல்லப்பபடுகிறது.இந்நிலையில், நாடு முழுவதிலும் வெயில் வாட்டி வதைப்பதால், இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது.

விலை கிடைப்பதில்லை (Price not available)

ஆனால், வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைப்பதால், இளநீருக்கு கட்டுபடியான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமென, இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது குறித்து ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:இளநீருக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், வரத்து பெரும் அளவு குறைந்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன், பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை தாலுகா பகுதிகளில் இருந்து தினமும், 3 முதல் 3.5 லட்சம் இளநீர், நாடு முழுவதிலும் விற்பனைக்காக அனுப்பப்பட்டது.

வரத்து குறைவு (Low supply)

தற்போது, வரத்து குறைந்து, 2 முதல் 2.5 லட்சம் இளநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது. இனி கோடை காலத்தில் தினமும், 1.5 லட்சம் அளவுக்கு மட்டுமே வரத்து இருக்கும்.வரத்து குறைந்து, தேவை அதிகரித்து விலை உயர்ந்து வருகிறது. தற்போது, ஒரு வீரிய ஒட்டு ரக இளநீர் பண்ணையில் வியாபாரிகளுக்கு, 18 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கடைகளில் மக்களுக்கு, 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தரகர்களுக்கு லாபம் (Profit for brokers)

விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை, இடைத்தரகர்களுக்கு மட்டுமே லாபம் கிடைக்கிறது. பல வியாபாரிகள், இடைத்தரகர்கள் 'சிண்டிகேட்' அமைத்து, 16 ரூபாய் வரையில் மட்டுமே விலை கேட்கின்றனர். விவசாயிகள் ஒற்றுமையாக இருந்து, 18 ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

 

English Summary: Thunder coconut sales for Rs. 45 - buys for Rs. 18 - Syndicate problem!
Published on: 25 January 2022, 08:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now