நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 5 November, 2021 9:43 AM IST
Credit : IndiaMART

தோட்டக்கலைத் துறையில் மானியத்தில் வழங்கப்படும் திசுவாழைக் கன்றுகளைப் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பயிரிடும் பரப்பை அதிகரிக்க (To increase the cultivation area)

தோட்டக்கலைப் பயிா்களின் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் தேசிய தோட்டக்கலை இயக்கம், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை சாகுபடி திட்டம், பிரதம மந்திரி நுண்ணீா் பாசன திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருள்கள், விதைகள், நாற்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

திசு வாழைக்கன்று (Tissue banana seedling)

இந்நிலையில் மாநிலத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் திசுவாழைக் கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் நடப்பாண்டு கோவை மாவட்டத்துக்கு 75 ஹெக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

திசு வாழை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ரூ.37,500 மானியத்தில்

இது தொடா்பாகத் தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம்.புவனேஸ்வரி கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் மானிய திட்டத்தின் கீழ் திசுவாழை கன்றுகள் வழங்கப்படுகின்றன. இதில் ஒரு ஹெக்டேருக்குத் தேவையான வாழை கன்றுகள் ரூ.37,500 மானியத்தில் வழங்கப்படுகிறது.

முன்பதிவு- முன்னுரிமை (Booking- Priority)

நேந்திரன், ஜி.9 என இரண்டு ரகங்கள் வழங்கப்படுகிறது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது. முன்பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் மானியம் வழங்கப்படும்.

எனவே விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

தமிழக விவசாயிகள் வங்கிக்கணக்கில் ரூ.1,234 கோடி பட்டுவாடா!

விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

English Summary: Tissue bananas at a subsidy of Rs. 37,500 - Call to farmers!
Published on: 05 November 2021, 09:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now