மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 July, 2020 12:18 PM IST
Credit : Dawn

கனமழை காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில், தக்காளிச் செடிகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

தமிழகத்தில், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, தேனி, விருதுநகர், நெல்லை, திண்டுக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களில், அதிகளவில் தக்காளி விளைச்சல் நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில், தற்போது பெய்து வரும் தென் மேற்கு பருவமழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் அறுவடைக்கு தயாரான பல ஆயிரம் ஏக்கர் நிலப் பரப்பிலான தக்காளிச் செடிகள் அழுகின. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

credit: Shutterstock

விலை அதிகரிப்பு (Price increase)

இதனிடையே கொரோனா நோய் தொற்று ஊரடங்கால், மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும், கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குக் கொண்டு வரப்படும் தக்காளியும் முற்றிலும் நின்றுவிட்டது.

காய்கறி மார்க்கெட்டுகளான சேலம் - தலைவாசல், திண்டுக்கல் - ஒட்டன்சத்திரம், மதுரை - மாட்டுத்தாவணி, நாகர்கோவில் - வடசேரி மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள, 179 உழவர்சந்தைக்கு, கடந்த மாதம் வரை, தினமும், 100 லாரிகளில் விற்பனைக்கு வந்த தக்காளி, தற்போது, 30 லாரிகளாக சரிந்துள்ளது. இதனால், அதன் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது.

இத்துடன் தற்போது விளைச்சல் பாதிப்பும் சேர்ந்துகொண்டாதால், சென்னை திருமழிசை காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனை மொத்தமாக வாங்கி வரும் சிறு வியாபாரிகள், மளிகைக் கடைகள் மற்றும் சாலையோர காய்கறி கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கின்றனர்.

Credit : India today

ரூ.70க்கு விற்பனை

கடந்த மே மாதம் கிலோ ஐந்து ரூபாய் வரை விற்பனையான ஒரு கிலோ தக்காளி விலை தற்போது ராக்கெட் வேகத்தில் 70 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர வாசிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே விவசாயிகள் தற்போது மீண்டும் தக்காளியை விதைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதால், அடுத்த ஒரு மாதத்திற்கு விலை இதே நிலையில் நீடிக்கும் என காற்கறி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் வெங்காயம், பீன்ஸ், கேரட், இஞ்சி உள்ளிட்ட காய்கறி விலையும் உயர்ந்திருக்கிறது.

மேலும் படிக்க...

ஆடிப்பட்டத்தில் விதைக்க ஏற்ற பொன்னாங்கண்ணி கீரை சாகுபடி!!

மலர் சாகுபடியில் நல்ல வருமானம் தரும் ஜாதிமல்லி!!

 

English Summary: Tomato plants rotted due to heavy rains - Farmers across Tamil Nadu affected
Published on: 15 July 2020, 11:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now