மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 February, 2021 6:37 PM IST
Credit : Dinamalar

விளைநிலங்களின் நீர்ப்பிடிப்பு திறனை அதிகரிக்க, பாரம்பரிய முறைப்படி, உடுமலை பகுதி, கிராமங்களில், ஏர் கலப்பையில், உழவு செய்வதை பின்பற்றி வருகின்றனர். வேளாண் நிலங்களில், அனைத்து வகை சாகுபடிக்கும் (Cultivation) ஆதாரமாக அமைவது, மண் வளம் ஆகும். அணை மற்றும் கிணற்றுப்பாசன சாகுபடி (Well Irrigation Cultivation) அதிகரிக்கும் முன்பு, பருவமழையை அடிப்படையாகக்கொண்டு, பல்வேறு விவசாய சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போது, நிலத்தை உழவு செய்ய, ஏர் கலப்பை முறையே அதிகளவு பின்பற்றப்பட்டு வந்தது. இதற்காக, பெரும்பாலான வீடுகளில், காளைகள் பராமரிக்கப்பட்டு; அவற்றின் சாணம் (Dung), தொழு உரமாக பயன்பட்டு வந்தது.

மீண்டும் ஏர்க் கலப்பை:

டிராக்டர் பயன்பாடு அதிகரித்த பிறகு, ஏர் கலப்பை உழவு முறைகள், கைவிடப்பட்டு, நாட்டு காளைகள் வளர்ப்பும் குறைந்தது. தற்போது, இயற்கை வேளாண்மை குறித்த, விழிப்புணர்வு (Awareness) அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மாடு, காளைகளை பராமரிக்க, ஆர்வம் அதிகரித்துள்ளது. உழவுப்பணிகளுக்கும், ரேக்ளா போட்டிகளுக்காகவும், நாட்டு ரக காளைகள் அதிகளவு வளர்த்து வருகின்றனர். அதே போல், செம்மண் மானாவாரி நிலங்களில், ஏர் உழவு முறை மீண்டும் பின்பற்றப்படுகிறது. வடகிழக்கு பருவமழைக்குப் (North-east Monsoon) பிறகு, பரவலாக தற்போது, விளைநிலங்களில், உழவுப்பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மானாவாரி நிலங்களில், ஏர் கலப்பையை கொண்டு உழுவதால், அதிக ஆழம் வரை, மண்ணில், 'சால்' உருவாகும். இதனால், மழைக்காலத்தில், அதிகளவு நீர் பிடிப்பு திறன் (Moisture) விளைநிலத்துக்கு கிடைக்கும்; சாகுபடியும் செழிக்கும். சோளம் (Maize) உட்பட தானியங்கள் விதைப்புக்கு, ஏர் கலப்பை முறையே சிறந்ததாகும். காளைகள் பராமரிப்பு மற்றும் ஏர் கலப்பையை, பயன்படுத்தி உழவு செய்ய தெரிந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது, என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் விவசாயிகள் ஏர்க் கலப்பை முறைக்கு திரும்பி இருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு மாடுகள் மற்றும் ஏர்க்கலப்பை கொண்டு பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கின்றனர் விவசாயிகள். அனைத்து விவசாயிகளுக்கும் ஏர்க்கலப்பை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால், பாரம்பரிய விவசாய முறை புத்துயிர்ப் பெறும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

உரச்செலவை குறைத்து விளைச்சலை அதிகரிக்க உதவும் பசுந்தாள் உரத்தின் பயன்கள்!

ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி!

English Summary: Traditional plough Plowing System Revives Crop Prosperity!
Published on: 17 February 2021, 06:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now