அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 16 February, 2023 12:34 PM IST
Training on Maintenance of Agricultural Machinery by TNSDC

வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் தொடர்பாக ஊரக இளைஞர்களுக்கு பயிற்சி – திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியீடு.

தொழிற்துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இளைஞர்களுக்கு தகுந்த வேலைவாய்ப்பு திறன்களை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை சார்பில் “ வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்க பயிற்சி ” வழங்க உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் : (TNSDC)

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் என்பது மாநிலத்தின் திறன் பயிற்சிகளுக்கான ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்பட்டு வருகிறது. தொழில் நிறுவனங்கள், தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், துறை திறன் குழுமங்கள், மதிப்பீடு செய்யும் நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை வழங்கி வருகிறது.

இந்நிலையில் தான், திருச்சி மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை – தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுது நீக்கம் தொடர்பான பயிற்சியினை வழங்க உள்ளதாகவும், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தகவல் வெளியிட்டுள்ளார்.

அதுதொடர்பான விவரங்கள் பின்வருமாறு: 

 “வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு சேவை வழங்குனர் “ என்ற பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சியானது , திருச்சி உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறை , அரசு இயந்திர கலப்பை பணிமனையில் நடைபெற உள்ளது .இந்த பயிற்சியில் சேர 18 வயது முதல் 45 வயது உடைய எஸ்.எஸ்.எல்.சி, ஐடிஐ ,ஏதேனும் ஒரு துறையில் பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பயின்ற ஊரக இளைஞர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் சேர விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் அலுவலகம் , அரசு இயந்திரக் கலப்பை பணிமனை , வேளாண்மை பொறியியல் துறை ,எண்: 20 வ.உ.சி.சாலை , கண்டோன்மெண்ட், திருச்சி-620001 என்ற முகவரிக்கு கீழ்க்காணும் விபரங்களுடன் நேரில் பதிவு செய்யலாம்.

  • பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
  • ஆதார் அட்டை, ( நகல் )
  • கல்விட் தகுதி சான்றிதழ், ( நகல் )
  • வங்கி கணக்கு ( நகல்)

நேரில் வர இயலாத இளைஞர்கள், WWW.tnskill.tn.gov.in  என்ற இணையதளம் மூலமாகவும் பதிவு செய்யலாம்.

மேலும் இது தொடர்பான சந்தேகம் மற்றும் இதர விபரங்களுக்கு 97915-40901, 98424-765776, 80568-41434 என்கிற மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

இந்திய விவசாயிகளுக்கு 5G இணையம் எவ்வாறு பயனளிக்கும்? - தெரிந்துகொள்ளுங்கள்

ஏரோ இந்தியா 2023 தொடக்கம் - சிறப்பம்சங்கள்

English Summary: Training on Maintenance of Agricultural Machinery by TNSDC- trichy Collector press release
Published on: 13 February 2023, 04:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now