Farm Info

Thursday, 05 November 2020 07:50 AM , by: Elavarse Sivakumar

திருந்திய நெல் சாகுபடி (Transformed Paddy Cultivation) முறையில் பல்வேறு பயன்கள் கிடைப்பதால், விவசாயிகள் இதனை மேற்கொள்ள முன்வரலாம் என வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கோட்பாடுகள் (Concept)

  • பாய் நாற்றங்கால் அமைத்து விதைப்பு செய்தல்

  • குறைந்த விதையான 14 நாட்கள் வயதுடைய இளம் நாற்றுக்கள்

  • குத்துக்கு ஒரு நாற்று நடவு செய்தல்

  • ரோட்டு வீடர் அல்லது கோனோ வீடர் என்ஸனும் களைக்கருவிகளை உபயோகித்து மண்ணை கிளரி விட்டுக் களையைக் கட்டுப்படுத்துதல்

  • நீர் மறைய நீர்க்கட்டுதல்

பயன்கள் (Benefits)

  • குறைந்த விதை அளவு போதுமானது

  • நாற்றங்கால் பரப்பளவு மிகவும் குறைவதால் பராமரிப்பு செலவு குறைகிறது

  • குறைந்த வயதுடைய நாற்றுகளை நடுவதினால் பக்க தூர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

  • அதிக இடைவெளியல் எண்ணிக்கை குறைகிறது

  • பெண்களைக் கொண்டு பாய் நாற்றங்களை மிக சுலபமாக அமைக்கலாம்.

  • களை கருவியினை பெண்களைக்கொண்டு சுலபமாக இயக்கலாம்.

  • சதுர முறையில் நடவு செய்வதால் பயிர்களுக்குத் தேவையான சூரிய ஒளி காற்று மற்றும் ஊட்டச்சத்துகள் தடையின்றி கிடைக்கிறது.

  • உற்பத்தி திறன் மிகுந்த பக்கத் தூர்கள் அதிகம் தோன்றுவதால் அதிக தானியம் மற்றும் வைக்கோல் மகசூல் கிடைக்கிறது.

  • நடைமுறையில் உள்ள நீர் பாசன முறையில் தேவைப்படும் நீரினைக் கொண்டு இருமடங்கு பரப்பில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளலாம்

தகவல்
முனைவர் அனுராதா
மண்ணியல் துறை

மேலும் படிக்க...

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)