மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 November, 2020 4:36 PM IST
Credit : Dinamalar

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயறு வகைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு 50% வரை மானியம் வழங்கப்படுகிறது.

பயறு உற்பத்திக்கு மானியம் 

தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, பச்சைப் பயறு மற்றும் கொண்டைக் கடலை ஆகிய பயிர்களை உற்பத்தி செய்ய எக்டர் ஒன்றுக்கு 7500 வழங்கப்படுகிறது.நிலக்கடலையை தொடர்ந்து உளுந்து பயிர் செய்வதற்கு எக்டர் ஒன்றுக்கு 15000 வழங்கப்படுகிறது. நிலக்கடலையுடன் ஊடு பயிர் உற்பத்தி செய்யவதற்கு எக்டர் ஒன்றுக்கு 9000 வழங்கப்படுகிறது. மேலும் விதைகள் உற்பத்தி மற்றும் விநியோகத்துக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது 10 ஆண்டுகளுக்குட்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு போன்ற உயர் விளைச்சல் ரக சான்று விதைகளுக்கு 50 சதவீத மானியம் அதிபட்சமாக கிலோ ஒன்றுக்கு 50 மானியம் வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு மற்றும் கொள்ளு போன்ற உயர் விளைச்சல் ரக சான்று விதைகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 25 வழங்கப்படும். உற்பத்தி மானியமாக, 10 ஆண்டுகளுக்குட்பட்ட துவரை, உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப் பயிறு ரகங்களுக்கு சான்று விதை உற்பத்திக்காக 50 சதவீத மானியம் அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு 25 வழங்கப்படும்.

மேலும் நூண்ணூட்ட உரக்கலவை வாங்க 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 500 வழங்கப்படும். உயிர் உரங்களுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 300 வழங்கப்படும். ஜிப்சத்துக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 750 வழங்கப்படும். பயிர் பாதுகாப்பு மருந்துகளுக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக எக்டர் ஒன்றுக்கு 500 வழங்கப்படும். சுழல் கலப்பை பெற இயந்திரம் ஒன்றுக்கு 34,000 அல்லது 40 சதவீத மானியம் இதில் எது குறைவோ அவை வழங்கப்படும்.

இயத்திரங்களுக்கான மானியம்

சிறு, குறு பெண் விவசாயிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு இயந்திரம் ஒன்றுக்கு 42,000 அல்லது 50 சதவீத மானியம் இதில் எது குறைவோ அவை வழங்கப்படும். விசைத் தெளிப்பான்களுக்கு 40 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக 3000 வழங்கப்படும். கிணறு உள்ளிட்ட நீர் ஆதாரங்களில் இருந்து வயலுக்கு தண்ணீர் எடுத்து செல்லும் பிவிசி குழாய்களுக்கு மீட்டர் ஒன்றுக்கு 35 அல்லது 50 சதவீத மானியம் அதிகபட்சமாக பயனாளி ஒருவருக்கு 15000 வழங்கப்படும்.

மேலும் படிக்க

தமிழக விவசாயிகளுக்கு நல்ல செய்தி....நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட அதிகம்!!

கால்நடை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்!!

English Summary: Up to 50% subsidy is given to farmers who produce pulses under the National Food Security Program.
Published on: 19 November 2020, 04:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now