நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 March, 2022 8:02 PM IST
To control whiteflies in coconut

தென்னையில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்களின் தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இவற்றை முறையாக கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்க்கலாம். ஈக்கள் தாக்கிய தென்னை இலைகளின் பின்புறத்தில் சுருள் சுருளாக நீள்வட்ட வடிவில் முட்டைகள் காணப்படும். இளங்குஞ்சுகள், முதிர்ச்சி அடைந்த ஈக்கள் ஓலையின் சாற்றை உறிஞ்சி வளர்ச்சியை பாதிக்கின்றன. இவை வெளியிடும் மெழுகின் மேல் கரும்பூசணம் வளர்வதால் ஓலைகள் கருப்பு நிறமாக மாறி ஒளிச்சேர்க்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டு மரத்தின் வளாச்சி குன்றிவிடும்.

வெள்ளை ஈக்களைத் கட்டுப்படுத்த (Control White flies)

ஏக்கருக்கு 2 விளக்குப்பொறியை இரவில் 7:00 மணி முதல் 11:00 மணி வரை வைத்து ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை 6 அடி உயரத்தில் இரு மரங்களுக்கு இடையே 10 எண்ணிக்கையில் தொங்கவிடலாம்.

விசைத் தெளிப்பானால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கீழ் மட்ட ஓலைகளின் உட்பகுதியில் படுமாறு தெளிக்கலாம். ஒட்டுண்ணி குளவி என்கார்சியா கூட்டுப்புழு இலைத் துண்டுகளை 10 மரங்களுக்கு ஒன்றாக வைத்து ஈக்களின் குஞ்சுகளை கட்டுப்படுத்தலாம்.

கிரைசோபிட் என்ற பச்சை கண்ணாடி இறக்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை ஏக்கருக்கு 300 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

ஒரு லிட்டர் நீரில் 25 கிராம் மைதா, ஒரு மில்லி ஒட்டும் திரவம் கலந்து கரும் பூசணங்களின் மேல் படும்படி தெளித்தால் 3 முதல் 5 நாட்களில் வெயிலில் உதிர்ந்து விடும். இயற்கை எதிரிகளான பொறிவண்டுகள், என்கார்ஸியா ஒட்டுண்ணி, கிரைசோபிட் இரைவிழுங்கிகளை வைத்தால் இயற்கையாக பெருகி ஈக்களை கட்டுப்படுத்தும். இதற்காக சாமந்தி பூ, தட்டை பயறு, சூரியகாந்தியை ஊடுபயிராக பயிரிட வேண்டும்.

- அமர்லால், வேளாண்மை உதவி இயக்குனர், திருப்புல்லாணி
ராமநாதபுரம், 94432 26130

மேலும் படிக்க

உவர்நிலத்தை வளமான விளைநிலமாக்கும் அதிசய செடி!

கம்பம் பகுதியில் நெல் அறுவடை துவங்கியது: குவிண்டால் ரூ. 2060க்கு கொள்முதல்!

English Summary: What can be done to control whiteflies in coconut?
Published on: 03 March 2022, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now