நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2022 4:10 PM IST
What is Biofortified Crops? What are its benefits?

நாட்டில் பாரம்பரியமாக பயிரிடப்படும் உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்கள் அதாவது (Biofortified Crops-இன்) உற்பத்தியை ஊக்குவிப்பதோடு, அந்த பயிர்களின் நுகர்வு மற்றும் சந்தைப்படுத்தல் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிர்களின் நன்மையைப் பற்றிய தகவல்களை, இந்த பதிவில் காணலாம்.

பாரம்பரியமாக பயிரிடப்படும் உயிர்ச் செறிவூட்டப்பட்ட பயிர்கள், ஊட்டச்சத்து மற்றும் வாழ்வாதாரத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடதக்கது. இந்த நோக்கத்திற்காக ஹார்வெஸ்ட் பிளஸ் (Harvest Plus) மற்றும் கிராமின் இந்தியா அறக்கட்டளை (Grameen India Foundation) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிவுள்ளது. உயிர் வளப்படுத்தப்பட்ட பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் உணவுப் பாதுகாப்போடு, ஊட்டச்சத்து பாதுகாப்பும் வழங்கப்படும். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பசி மற்றும் ஊட்டச் சத்து குறைபாட்டைச் சமாளிக்க, குறிப்பாகப் பெண்களைத் தயார்படுத்த, விவசாய அடிப்படையிலான வாழ்வாதாரங்கள், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுடன் நிதிச் சேர்க்கையிலும், இந்த ஒத்துழைப்பு கவனம் செலுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இந்த பணியை ஊக்குவிக்கும் பொறுப்பு கிராமீன் மித்ர எனப்படும் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும், அவர்கள் முக்கியமாக பெண் விவசாய தொழில்முனைவோராக இருப்பார்கள். அத்தகைய பெண்கள் இந்த புதிய தொடக்கத்தை வழிநடத்துவார்கள். இந்தப் பெண்கள் கிராமங்களில் வீடு வீடாகச் சென்று இந்த முயற்சியின் கீழ் வழங்கப்படும் சேவைகளை வழங்குவார்கள். இது தவிர, வழக்கமான உரையாடல் மூலம், விவசாயிகளுடன் இணைவர்.

பெண்கள் கிராமத்து நண்பர்களாகி புதிய திறன்களைக் கற்றுக் கொள்கிறார்கள் (The girls become village friends and learn new skills)

இவர்கள் கிராமப்புற நண்பர்களாகி, பெண்கள் புதிய திறன்களைக் கற்று, நல்ல வருமானம் பெறுகிறார்கள், பொருளாதார சுதந்திரத்தைப் பெற்று, தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சங்கத்தின் கீழ், உயிரி வலுவூட்டப்பட்ட துத்தநாக கோதுமை விதைகள் உத்தரபிரதேசத்தில் ஒரு முன்னோடி திட்டமாக வணிகமயமாக்கப்பட்டது. இந்த திட்டம் உத்தரபிரதேசத்தில் பயோஃபோர்டிஃபைட் விதைகளின் வணிகமயமாக்கல் திட்டத்தின் கீழ் செய்யப்படுகிறது. ஹார்வெஸ்ட் பிளஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஊட்டச்சத்துக்கான குளோபல் அலையன்ஸ் மூலம் இந்த பணி நடைபெற்று வருகிறது.

சிறு விவசாயிகளுக்கு பயிற்சி

பைலட் திட்டத்தின் கீழ் உயிரி வலுவூட்டப்பட்ட விதைகளை வணிகமயமாக்கும் திட்டத்தின் முக்கிய கவனம் சிறு விவசாயிகளின் திறனை மேம்படுத்துவதாகும். இதற்கான பயிற்சியும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில், குறைந்தபட்சம் 30 சதவீத பெண் விவசாயிகள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில், உயிரி வலுவூட்டப்பட்ட பயிர்களை சாகுபடி செய்வது குறித்தும், உற்பத்தியை அதிகரிக்க பயிற்சியின் மூலம் திறன் மேம்பாடு குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட இருந்தது. இதனுடன், விவசாயிகள் மற்றும் பல்வேறு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு அறுவடைக்கு முந்தைய மற்றும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள் மற்றும் அதன் மேலாண்மை குறித்து முறையான தகவல்களை வழங்கப்படும்.

உயிரி வலுவூட்டப்பட்ட விதைகளை பின்பற்ற ஊக்குவிப்பு

கிராமீன் அறக்கட்டளை இந்தியாவின், தலைமை நிர்வாக அதிகாரி, ஹார்வெஸ்ட் பிளஸின் கூட்டாண்மையால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், ஏனெனில் இது நாட்டில் வறுமை மற்றும் பசியைத் தடுக்கும் எங்கள் பணியை மேலும் மேம்படுத்த உதவுகிறது. உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்கு விவசாயிகளை தங்கள் அமைப்பு சந்தித்து, உயிரி வலுவூட்டப்பட்ட விதைகளை பின்பற்ற ஊக்குவிக்கிறது என தெரிவித்தார். இது நீண்ட காலத்திற்கு உணவில் உள்ள நுண்ணூட்டச் சத்துக்களின் குறைபாட்டைப் போக்க உதவியாக இருக்கும். குறுவை பருவத்தில் 1600 ஏக்கரில் உற்பத்தி செய்யப்படும், உயிரி வலுவூட்டப்பட்ட கோதுமை 60,000 க்கும் மேற்பட்ட நபர்களின் நுகர்வு மற்றும் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

TNPSC: குரூப் 2 மற்றும் 2 ஏ பிரிவிகளுக்கு தேர்வு தேதிகள் அறிவிப்பு! விவரம் உள்ளே!

தமிழகம்: விவசாயிகள் பயன்பெற 90 நாள் முகாம், மாணவர்கள் ஆலோசனை

English Summary: What is Biofortified Crops? What are its benefits?
Published on: 18 February 2022, 04:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now