Farm Info

Saturday, 30 July 2022 11:49 AM , by: Elavarse Sivakumar

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான வாழைக்கான விலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தின், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய வாழை இரகங்களுக்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய அறிக்கையின் படி, 2021-22ஆம் ஆண்டு இந்தியாவில், வாழை 9.59 இலட்சம் எக்டர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 351.31 இலட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது.

வாழை ரகங்கள்

தமிழகத்தில் பொதுவாக தேனி, கன்னியாகுமரி, கோயம் புத்தூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் பூவன், கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் ஆகிய ரகங்கள் அதிகளவு பயிரிடப்படுகின்றன. இவற்றில், பூவன் மற்றும் கற்பூரவள்ளி ஆகியவை இலை நோக்கத்திற்காகவும் பயிரிடுகின்றனர்.

ஆய்வு

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக விலை முன்னறிவிப்பு குழு, கடந்த 17 ஆண்டுகளாக கோயம்புத்தூர் சந்தைகளில் நிலவிய பூவன். கற்பூரவள்ளி மற்றும் நேந்திரன் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

என்ன விலை கிடைக்கும்?

ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆகஸ்ட் - செப்டம்பர் 2022 முடிய தரமான பூவன் வாழையின் பண்ணை விலை ரூ.17 முதல் 18, கற்பூரவள்ளி ரூ.20 முதல் 22 மற்றும் நேந்திரன் விலை ரூ.38 முதல் 40 வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

தொடர்புக்கு

கூடுதல் விவரங்களுக்கு, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையம், தொலைபேசி -0422-2431405, ஆ) இயக்குனர் மற்றும் முனை அதிகாரி, தமிழ்நாடு பாசன விவசாய நவீன மாயமாக்கல் திட்டம், நீர் நுட்ப மையம், தொலைபேசி - 042 - 6611278. தொழில்நுட்ப விவரங்களுக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், பழப்பயிர்கள் துறை,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் - 641 003. தொலைபேசி எண் - 0422 - 6611269 தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)