வருடத்திற்கு 4000 குவிண்டால்- உருளை சாகுபடியில் அசத்தும் உ.பி. விவசாயி ! அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 3 February, 2021 10:26 PM IST
Credit : Shutterstock

விவசாயிகள், வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால் நேரடியாக வேளாண் அலுவலகத்திற்கு சென்று காத்திருந்து தான் சந்திக்க வேண்டும். இதற்காக, விவசாயிகளுக்கு அதிக நேரம் செலவாகிறது. விவசாயிகளின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வேளாண் அலுவலர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், ஒரு புதிய வாட்ஸ்அப் குழு (Whatsapp group) திண்டுக்கல்லில் வட்டார அளவில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் குழு, விவசாயிகளின் சந்தேகங்களை உடனுக்குடன் தீர்ப்பதோடு, ஆலோசனைகளையும் வழங்குகின்றனர் வேளாண் அதிகாரிகள்.

உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம்

விவசாயிகளுக்கு பல்வேறு தொழில்நுட்ப ஆலோசனைகள் (Technical Advise) வழங்கும் வகையில், வேளாண் மற்றும் தோட்டக்கலையில் 'உழவர்-அலுவலர் தொடர்பு திட்டம் (Farmer-Officer Communication Project) அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நேரடியாக விவசாயிகளை சந்தித்து அலுவலர்கள் ஆலோசனை வழங்குவர். நவீன தொழில்நுட்பங்கள், மானிய திட்டங்களை (Subsidy Scheme) விவசாயிகளுக்கு அலுவலர்கள் விளக்கவும் செய்கின்றனர். கூட்டம் நடத்துதல், செயல் விளக்கம் அளித்தல் ஆகிய பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

வாட்ஸ்அப் குழு

வேளாண், தோட்டக்கலையில் தலா ஒரு அலுவலர், ஒவ்வொரு கிராமத்திலும் 10 முன்னோடி விவசாயிகளை தொடர்பு கொண்டு உரிய கால இடைவெளியில் ஆலோசனை வழங்குவர். அலுவலர்கள் கிராம ஊராட்சிக்கு செல்வதையும், வேளாண் தகவல்களை (Agri Information) பரிமாறிக் கொள்வதையும் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு உயரதிகாரிகள் கண்காணிப்பர். இதற்காக 14 ஒன்றியங்களிலும் வட்டார அளவில் விவசாயிகளை உடனடியாக தொடர்பு கொள்ள, தகவல்களை பரிமாறிக்கொள்ள 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் துவங்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

பயிர்களின் தரத்தை உயர்த்தும் பாசன நீரை பரிசோதிக்கும் வழிமுறை!

விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும், வேலூர் கலெக்டர் வலியுறுத்தல்

English Summary: WhatsApp group to contact farmers and agricultural officers!
Published on: 03 February 2021, 07:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now