மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 January, 2021 9:09 PM IST
Credit : Vikatan

தமிழில் "சிறகு அவரை" என்றும், மலையாளத்தில் 'சதுர வரை' என்றும் வழங்கும் வடமாநிலங்களில் "கோவாபீன்" என்றும் அழைக்கப்படுகிறது. அறிவியல் பெயர் : "சொபோகார்பஸ் டெட்ராகோனலோபஸ்" (Psophocarpustetragonolobus). இதன் தாயகம் நியூகினி என்றாலும் காற்றில் ஈரப்பதம் (Moisture) அதிமாக இருக்கும் வெப்ப மண்டலங்களான தென்கிழக்கு ஆசியநாடுகளில் அதிகம் சாகுபடி (Harvest) செய்யப்படுகிறது.

சிறப்பு

அவரை, பயறு குடும்பத்தைச் சார்ந்ததால் தனக்குத் தேவையான சத்துக்களை வேரில் வாழும் பாக்டீரியாவின் (Bacteria) துணையுடன் தயாரித்துக்கொள்ளும். பூச்சி, நோய் எதிர்ப்புசக்தி அதிகம். ஒருமுறை விதை ஊன்றினால் போதும், மறு ஆண்டு ஊன்றத் தேவையில்லை. விதைத்த 90ஆம் நாளில் ஊதா நிறப் பூக்கள் தோன்ற ஆரம்பிக்கும். மகரந்தச் சேர்க்கை நடைபெற்ற இரண்டாம் வாரத்தில் நல்ல, 15 லிருந்து 22 செ.மீ. நீளமுடைய, மிருதுவான காய்கள் கிடைக்கும். ஒரு கொடியிலிருந்து நான்கு முதல் ஐந்து கிலோ காய்கள் கிடைக்கும். இவற்றின் இலைகள், வேர்க் கிழங்குகளைக் கூட சோயாபீன்ஸ் (Soya beans) போன்று உணவாகப் பயன்படுத்தலாம். அதிக அளவு அதாவது 35 லிருந்து 40 சதவீதம் புரோட்டீனும், சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து, போலிக் அமிலங்களும் (Polic Acid) உள்ளன.

பயன்கள்

பலபயன் மிக்க தாவர வகைகளில் ஒன்றான சிறகு அவரையை தென்னை மரங்களில் ஏற்றி வளர்ப்பதால் சிறந்த பசுமை மூடாக்காகவும், மூடுபயிராகவும் உள்ளது. இதனால் தென்னையில் (Coconut) தோன்றும் வாடல், சாறுவடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கலாம். தழையை உரமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்தலாம். புரோட்டீன் (Protein) பற்றாக்குறையுள்ள ஏழை, எளிய மக்களுக்கு இதன் பயன்பாடு மிகுந்த பலன் தரும்.

ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை

ஆக்கம் : வே. வீரப்பன் B.Sc.Agri, வேளாண்மை அலுவலர் (ஓய்வு)

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் விளைபொருள் ஒப்பந்தச் சட்டத்தை எதிர்த்து மனு!

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது! 4.5 கோடியை அளித்தது தோட்டக்கலை துறை!

நெல் கொள்முதலில் கிடைக்குமா 20% ஈரப்பதம்? கடலூர் விவசாயிகள் கோரிக்கை!

English Summary: Winged peas suitable for home garden! Can coconut control wilt?
Published on: 22 January 2021, 09:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now