நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 31 March, 2022 4:01 PM IST
Credit : Hindu Tamil

மாநிலம் முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு (women self help groups) ரூ.1,084 கோடி கடனுதவிக்கான காசோலைகளை வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி (CM Palanisamy) இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழக மகளிர் குழுக்களுக்கு பேருதவியாக அமையும். பெண்கள் சுயதொழில் தொடங்க ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடனுதவி:

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (4.2.2021) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், 20,186 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 1,083.96 கோடி ரூபாய் மற்றும் 317 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 277.79 கோடி ரூபாய், என மொத்தம் 1,361.75 கோடி ரூபாய் வங்கிக் கடன் (Bank Loan) இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக, 7 மகளிர் சுய உதவிக் குழுக்கள் (Women self help group) மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.

மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கிகளில் குறைந்த வட்டியில் (Low Interest) கடன் பெறவும், வங்கிகளுடன் வலுவான நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டு வருமானம் ஈட்டக்கூடிய பொருளாதாரத் தொழில்களைத் தொடங்கி நடத்திடவும், அதிக அளவு கடன்களைத் தொடர்ச்சியாகப் பெறவும் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புத் திட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் பெண்களின் பொருளாதார ஆற்றல் (Economic energy) மேம்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வங்கிக் கடன் இணைப்பு

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19.3.2020 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு இலக்கு (Target) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்தார். ஆனால், அந்த இலக்கினையும் கடந்து இதுவரையில் 15,653.04 கோடி ரூபாய் வங்கிக்கடன் தொகை 3,82,121 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை, கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடன் தொகையினை விட அதிகமானதாகும்.

மேலும், கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு 48,737.40 கோடி ரூபாய் கடனுதவியாக (Loan) வங்கிகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. அரசால் 2011ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்திற்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 81,582.65 கோடி ரூபாய் வங்கிக் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள், வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ள வாட்ஸ் ஆப் குழு!

பனங்கிழங்கு அறுவடை தீவிரம்! பனை மரங்களை காக்க விவசாயிகள் கோரிக்கை!

English Summary: 1,084 crore loan scheme for women self help groups Launched!
Published on: 04 February 2021, 08:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now