5 Days Online Training on Tally ERP-9 starts tomorrow
கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் கணக்கு ஈஆர்பி-9 (ERP-9) குறித்த இணையவழி பயிற்சியானது நாளை தொடங்கி வருகிற மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்த அறிவிப்பின் விவரங்கள் பின்வருமாறு-
சென்னையிலுள்ள தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் கணக்கு ஈஆர்பி-9 (ERP-9) குறித்த இணையவழி பயிற்சியானது (5 நாட்கள்) வரும் 27.03.2023 தேதி முதல் 31.03.2023-ம் தேதி வரை (மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை) வழங்க உள்ளது. இந்த 5 நாள் பயிற்சிக்கான கட்டணமாக ரூ.2500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் பயிற்சியின் விவரங்கள்:
இப்பயிற்சியில் வணிகக் கணக்குகளின் அடிப்படைகள் மற்றும் டேலி பிரைம், கணக்கியல் விதிமுறைகள் கருத்துகள் & கோட்பாடுகள், இரட்டை நுழைவு முறைமை கணக்குகளின் வகைகள், கணக்கியல் ரசீது வவுச்சர் கணக்கு சமன்பாடுகள். லெட்ஜர் இலிருந்து இடுகையிடுதல், சோதனை இருப்பு குறுக்குவழி விசைகள் வி. வவுச்சர் பதிவுகள், காப்பு மற்றும் மறுசீரமைப்பு, ஏற்றுமதி மற்றும் அச்சிடும் அறிக்கைகள், பில்கள் வாரியான விவரங்கள், பில் பெறத்தக்கவை மற்றும் பில் செலுத்த வேண்டியவை செலவு மையங்கள் & செலவு வகை தொகுதி விவரங்கள், பங்கு வைக்கும் அலகுகளை பராமரித்தல், குடோனை உருவாக்குதல், விகிதம் அனலிசி, பல மொழி, விலை பட்டியல், பொருள், ஆர்டர் செயலாக்கம் கொள்முதல் பதிவு மற்றும் விற்பனை பதிவு, பட்ஜெட் கட்டுப்பாடு, ஜிஎஸ்டி நிரப்புதல் ஆகியவையும் பயிற்றுவிக்கப்படும்.
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கு முன்பதிவு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள் விவரம் பின்வருமாறு-
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.
அணுக வேண்டிய தொலைபேசி / கைபேசி எண்கள்: 9444556099, 9677152265, 044-22252081/22252082.
மேலும் காண்க:
தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி: பென்சன் விதியில் அரசு செய்த முக்கிய மாற்றம்!