நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2023 2:37 PM IST
Apply today for a free sewing machine with electric motor!

சிறுபான்மையின மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், சிறுபான்மையினரின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தவும், இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்களை வழங்கிட ஆணை வரப்பெற்றதை தொடர்ந்து சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்க்கண்ட தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கீழ்வாறும் தகுதிகளுக்கு உட்பட்டு மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் மிஷின் வழங்கப்படும்.

  1. தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
  2. ஆண்டு உச்சவரம்பு ரூ.1,00,000/- ஆக இருத்தல் வேண்டும்.
  3. வயது வரம்பு 20 முதல் 45 வரை இருக்க வேண்டும்.
  4. கைம்பெண் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  5. ஒரு முறை தையல் மேஷின் வாங்கியவராக இருப்பின் மீண்டும் தையல் மேஷின் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர்.
  6. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் மாவட்ட
    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெற்று தகுதி இருப்பின் முன்னுரிமை அடிப்படையில் தையல் இயந்திரங்களை பெறலாம்.

இலவச தையல் மிஷின் பெற எங்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்?

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தரை தளத்தில் அறை எண் 11-இல் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி. ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா, அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், அரியலூர்.

மேலும் படிக்க:

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் (PMEGP): தொழில் தொடங்க ரூ.50 லட்சம் கடனுதவி

விவசாயிகளின் தொழில்நுட்ப சந்தேகங்கள் களைய நடவடிக்கை: உங்கள் மாவட்ட ஆலோசகரை அணுகவும்

English Summary: Apply today for a free sewing machine with electric motor!
Published on: 07 August 2023, 02:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now