நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2023 11:59 AM IST
farmers buy tractor in Subsidized loan of NEEDS Scheme

நாகப்பட்டினம் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் டிராக்டர்கள், அறுவடை இயந்திர உபகரணங்கள் மற்றும் விவசாய இயந்திர உபகரணங்களை நீட்ஸ் திட்டத்தின் கீழ் மானியத்துடன் வாங்குவதற்கு கடனுதவி பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.

படித்த, சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள முதல் தலைமுறைத் தொழில் முனைவோரின் தொடக்க முன்னெடுப்புகளை ஆதரித்து, நெறிப்படுத்தி, ஊக்குவிக்கும் நோக்கத்துடன் தமிழ்நாடு அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்தினை (நீட்ஸ்) 2012-13 முதல் செயல்படுத்தி வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த, திட்டத்தொகை ரூ.10.00 இலட்சத்துக்கு மேலும் ரூ.5.00 கோடிக்கு மிகாமலும் உள்ள தொழில் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தில் மானியமானது திட்ட தொகையில் 25% மானியம், பட்டியல் வகுப்பு, பட்டியல் பழங்குடி இனம் மற்றும் மாற்றுத் திறனாளிக்குக் கூடுதல் மானியமாக திட்டத்தொகையில் 10% வழங்கப்படுகிறது. மானிய உச்ச வரம்பு ரூ.75.00 இலட்சம். மேலும், கடனைத் திரும்பச் செலுத்தும் காலம் முழுமைக்கும் 3% வட்டி மானியமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் பயனுற குறைந்தபட்சம் +2 தேர்ச்சி/ பட்டம்/ பட்டயம்/ தொழிற்பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது 21-க்கு குறையாதிருக்க வேண்டும். உச்ச வரம்பு பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 55 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர் பங்கு பொதுப்பிரிவினருக்கு திட்டத்தொகையில் 10%, சிறப்புப் பிரிவினர் 5% செலுத்திடல் வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், சேவைப் பிரிவில், மண் அள்ளும் இயந்திரங்கள், காங்கிரீட் மிக்சர் வாகனம், ரிங் போரிங் வாகனம், ரெஃப்ரிஜரேட்டட் ட்ரக் போன்ற சேவைத் தொழில்களுக்கும் கடனுதவி அளிக்கப்பட்டது.

தற்போது சிறப்பு நிகழ்வாக இத்திட்டத்தின் கீழ் அறுவடை இயந்திர உபகரணங்கள், டிராக்டர்கள் அனைத்து வகையான விவசாய உபயோகத்திற்கான இயந்திர உபகரணங்களை வாங்கி வாடகைக்கு விடுவதான தொழில் திட்டங்களுக்கும் கடனுதவி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் டெல்டா பகுதியில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி கூடுதல் பலன்பெறலாம்.

இது குறித்த மேலான விவரங்கள் மற்றும் ஆலோசனைகள் பெற மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தினுள் அமைந்துள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

கேலி கிண்டல் செய்த ஊரே அண்ணாந்து பார்க்க வைத்த பெண் விவசாயி

செம சான்ஸ்- ஜவுளிப்பூங்கா அமைக்க 50 % மானியம்!

English Summary: farmers buy tractor in Subsidized loan of NEEDS Scheme
Published on: 04 September 2023, 11:59 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now