மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 January, 2021 5:14 PM IST
Credit : One india

காரைக்கால் மார்க்கெட் கமிட்டியில் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ.நாம் -E-Naam) திட்டம் நேற்று துவக்கப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் (Kamalakannan) இத்திட்டத்தை துவக்கி வைத்தார். அபிவிருத்தி ஆணையர் மற்றும் வேளாண்துறை செயலர் அன்பரசு முன்னிலை வகித்தார். கலெக்டர் அர்ஜூன்சர்மா (Arjun Sharma) வரவேற்றார்.

திட்டத்தின் பயன்கள்

காரைக்கால் சந்தையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்குத் தேவையான தரக்கட்டுப்பாட்டு கருவிகளான ஈரப்பதம் பார்க்கும் கருவி (Moisture Equipment), மூட்டை அடுக்கும் பலகைகள், தார்பாய், கைத்தெளிப்பான், மின்னணு எடை கருவி (Electronic Weight machine), கணினிகள் அடங்கிய அலுவலக பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. உழவர் நலத்துறை இயக்குநர் பாலகாந்தி, புதுச்சேரி வேளாண்மையத் துறை கூடுதல் வேளாண் இயக்குநர் ஜெயசங்கர், மாவட்ட கூடுதல் இயக்குநர் செந்தில்குமார், மார்க்கெட் கமிட்டி செயலர் கணேசன், வேளாண் விளை பொருள் உரிமம் பெற்ற வியாபாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

கரும்பு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் எத்தனால் உயிரி உரம் உற்பத்தி!

வியாபாரிகள் மகிழ்ச்சி:

காரைக்காலில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தால், அங்குள்ள வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் போதிய வசதிகள் அனைத்தும், சந்தையிலேயே கிடைத்து விடும். வேளாண் துறை அமைச்சர் தொடங்கி வைத்த இத்திட்டம், அனைவருக்கும் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!

English Summary: National Electronic Agricultural Market Project in Karaikal! The Minister of Agriculture started!
Published on: 06 January 2021, 05:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now