மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 May, 2023 12:06 PM IST
Under 5 years of age should not take ticket in TN govt bus

அரசு பேருந்துகளில் தற்போது வரை 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கி வரும் நிலையில் அதனை 5 வயதாக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அமைந்தது முதலே போக்குவரத்துத் துறை சார்ந்து பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள், வெளியாகி வருகின்றன. அதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது.

இந்நிலையில் தான் இன்று கட்டணமில்லா பேருந்து சேவை தொடர்பான புதிய அரசாணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அவற்றில் குறிப்பிட்டுள்ளவை- நீண்ட காலமாக தமிழக அரசு பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பள்ளி மாணவர் முதல் மகளிர் வரை:

ஏற்கெனவே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு. 60 வயதை பூர்த்தி அடைந்த முதியவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிவித்த மகளிர் கட்டணமில்லா பேருந்து பயண திட்டமும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசின் மகளிர் கட்டணமில்லா பயண திட்டத்தின் வாயிலாக, 258.06 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர் என சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல் தெரிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் உள்ள மொத்த நகரப் பேருந்துகளில், 7,164 சாதாரண நகரப் பேருந்துகள் (74.47%) மகளிர் கட்டணமில்லா பயணத்திற்காக இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தினால் ஒவ்வொரு மகளிர் பயணியும் அவர்களது மாதாந்திர செலவில் ரூ.888/- சேமிக்கின்றனர் என்பது மாநில திட்டக் குழுவின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பெண்களுக்கான இருக்கை அதிகரிப்பு:

அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின்(TNSTC) கீழ் மிதவை, இருக்கை, படுக்கை, குளிர்சாதன வசதி, உள்ளிட்ட பல்வேறு வகையான சொகுசு வசதிகள் கொண்ட 1,078 பேருந்துகள் உள்ளன. நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் வகையில் 251 வழித்தடங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கு முன்பு பெண்கள் மட்டுமே முன்பதிவு செய்யும் வகையில் ஒவ்வொரு அரசு விரைவு பேருந்திலும் 2 இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது அந்த இருக்கைகளின் எண்ணிக்கையினை 4 ஆக உயர்த்தியும் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே கடுமையான நிதிநெருக்கடியில் சிக்கி வரும் தமிழக போக்குவரத்து துறைக்கு இது கூடுதல் நிதிச்சுமையினை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் காண்க:

3 ஆண்டுகளுக்கு இலவச பயிர் காப்பீடு- அரசு அதிரடி அறிவிப்பு

English Summary: Under 5 years of age should not take ticket in TN govt bus
Published on: 24 May 2023, 12:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now