சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 20 September, 2021 5:01 PM IST
7 Natural Foods That Will Cure Food Poisoning!
7 Natural Foods That Will Cure Food Poisoning!

சில நேரங்களில் உங்களுக்கு பிடித்த உணவை உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தலாம். மேலும், பருவ காலங்களில் நாம் அடிக்கடி வெளி உணவுகளை சாப்பிடுகிறோம். வெளிப்புற உணவு நச்சுத்தன்மையானது பெரும்பாலும் மோசமான மற்றும் சுகாதாரமற்ற உணவு சாப்பிடப்படுகிறது.

வயிற்று அசௌகரியம் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உண்மையில் ஃபுட் பாய்சன் ஆவதால் ஏற்படுகிறது. மாசுபாடு அதிகரித்து வருவதால் ஃபுட் பாய்சன் ஏற்படுகிறது என்ற பொது ஒருமித்த கருத்து உள்ளது, இது ஒரு தீவிர பொது சுகாதார ஆபத்தை ஏற்படுத்துகிறது.

நாம் பல வழிகளில் ஃபுட் பாய்சன் பிரச்சனையை குணப்படுத்த முடியும், இதற்கு சிறந்த மற்றும் எளிதான வழி இயற்கை மூலிகைகள் மூலம் செய்யலாம்.

இஞ்சி

ஃபுட் பாய்சனின் அறிகுறிகளை ஏற்பட்டால் அதனை சரி செய்ய இஞ்சி சிறந்தது. இஞ்சியில் அதிகமான அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளது. ஒரு கப் தண்ணீரை ஒரு ஸ்பூன் துருவிய இஞ்சியுடன் கொதிக்க வைக்கவும். தேவையான அளவு தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்கலாம். இஞ்சியை வெறுமனே பச்சையாகவும் சாப்பிடலாம்.

தயிர் மற்றும் வெந்தய விதைகள்

தயிரின் ஆன்டிபாக்டீரியல் குணங்கள் ஃபுட் பாய்சன் ஏற்படுத்தும் கிருமிகளுக்கு எதிரான வேலை செய்கிறது. வெந்தய விதைகளில் நிறைய கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது, இது தண்ணீரை உறிஞ்சி, ஃபுட் பாய்சன் ஆகாமல் இருக்க நச்சுக்களை வெளியேற்றுகிறது. வெந்தய விதைகள் ஒரு மசகு தன்மையைக் கொண்டுள்ளன, இது வயிற்று வலிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். விதைகளை மெல்லாமல் விழுங்க பரிந்துரைக்கப்படுகிறது.

பூண்டு

வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று அசௌகரியம் உள்ளிட்ட அறிகுறிகளைக் பூண்டு குறைக்கிறது, ஏனெனில் அதன் சக்திவாய்ந்த ஆன்டிவைரல், பாக்டீரியா எதிர்ப்பு தன்மைகள் ஃபுட் பாய்சன் பிரச்சனையை சரி செய்கிறது. ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் ஒரு பூண்டு பள்ளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு வாசனை தாங்க முடியாவிட்டால், நீங்கள் பூண்டு சாறு குடிக்கலாம். இல்லையெனில், பூண்டு மற்றும் சோயாபீன்-எண்ணெய் கலவையை உருவாக்கி, இரவு உணவிற்குப் பிறகு உங்கள் வயிற்றில் மசாஜ் செய்யவும்.

தேன்

தேன் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக ஃபுட் பாய்சன் சிகிச்சைகளில் நல்ல பலன் தரும். ஒரு நாளைக்கு மூன்று முறை, ஒரு தேக்கரண்டி தேனை உட்கொள்ளுங்கள். நீங்கள் விரும்பினால் தேநீர் அல்லது எலுமிச்சம்பழத்துடன் குடிக்கலாம்.

சீரகம் விதைகள் (ஜீரா)

சீரகம் சாப்பிடுவது பெரும்பாலும் ஃபுட் பாய்சனுக்கு பாரம்பரிய வீட்டு வைத்தியம் என்று அழைக்கப்படுகிறது. இது உங்கள் உடலில் செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கிறது, இதனால் செரிமானத்தை துரிதப்படுத்துகிறது.

ஒரு கப் தண்ணீரில் சீரகத்தை வேகவைத்து, பின்னர் புதிதாக எடுக்கப்பட்ட கொத்தமல்லி சாற்றைச் சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும். உப்பு, சீரகம் மற்றும் பெருங்காயம் ஆகியவற்றின் கலவையையும் பயன்படுத்தலாம். இந்த பானத்தை ஒரு நாளைக்கு குறைந்தது 2-3 முறை உட்கொள்ள வேண்டும்

துளசி

ஃபுட்  பாய்சனுக்கு பயன்படுத்தப்படும்  சிறந்த மூலிகைகள் துளசி இலைகள். துளசி இலைகளில் அழற்சி எதிர்ப்பு குணங்கள் உள்ளன, அவை செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.

உங்கள் உடலில் உள்ள அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலம், துளசி உங்கள் உடலின் சரியான pH அளவை மீட்டெடுக்க உதவுகிறது.

கொத்தமல்லி 

ஏறக்குறைய ஒவ்வொரு இந்திய உணவுகளிலும் கொத்தமல்லி இலைகள் ஒரு சுவையை அதிகரிக்கும். இருப்பினும், உங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே அதன் சிகிச்சை நன்மைகள் பற்றி தெரிந்திருக்கும். இது வயிற்று நோய்த்தொற்றால் ஏற்படும் சேதத்திலிருந்து உங்கள் வயிற்றைப் பாதுகாக்கிறது. சிறிது கொத்தமல்லி இலைகளை ஒரு பாட்டில் தண்ணீரில் போட்டு ஒரே இரவில் விட்டுவிடவும். மறுநாள் காலையில், அதை குடிக்கவும்.

 இந்த பருவத்தில் ஃபுட்  பாய்சன் ஆவதை தவிர்க்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீரேற்றமாக இருங்கள், தளர்வான ஆடைகளை அணியுங்கள், நீங்கள் வெளியே செல்லும் போது உங்களுடன் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க..

கொத்தமல்லியின் மருத்துவ பயன்கள்! தெரிஞ்சிக்கலாம் வாங்க

English Summary: 7 Natural Foods That Will Cure Food Poisoning!
Published on: 20 September 2021, 05:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now