சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 1 November, 2021 10:23 PM IST
87% of victims are not vaccinated - Health Department shocking information!

தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பலியானவர்களில் 87% பேர் தடுப்பூசிப் போடாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கொடூரக் கொரோனா (Cruel corona)

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை உலுக்கியக் கொரோனா வைரஸ் பரவல் தமிழகத்திலும் தனது கோரத்தாண்டவத் அரங்கேற்றி வருகிறது.
தொடக்கத்தில் அடுக்கடுக்காக ஏற்பட்ட உயிர்பலியைத் தொடர்ந்து, மக்களின் உயிர்காக்கும் தடுப்பூசிப் போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

தடுப்பூசி  சர்ச்சை  (Vaccine controversy)

தடுப்பூசி குறித்த சர்ச்சைகள் ஒருபுறம் பரவிய நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, உயிர்காக்க தடுப்பூசிப் போட்டுக்கொள்வது அவசியம் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தடுப்பூசி முகாம்களும் முழுவீச்சில் நடத்தப்பட்டு, 100% தடுப்பூசிப் பாதுகாப்பு அரணை ஏற்படுத்த மத்திய- மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

சுகாதாரத்துறைத் தகவல் (Health Information)

இந்நிலையில், இதுதொடர்பான ஆய்வில், தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனாவிற்கு பலியானவர்களில் 87 % பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்ற அதிர்ச்சித் தகவலை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 2 மாதங்களில் தமிழ்நாட்டில் 1,626 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அதில் 1,419 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். அதாவது இறந்தவர்களில் 87 சதவிகிதம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மாதங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 63% பேர் கொரோனாத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள். 24% பேர் தடுப்பூசி ஒரு டோஸ் போட்டுக்கொண்டவர்கள். 13% பேர் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்.

87% தடுப்பூசி போடாதவர்கள் (87% are unvaccinated)

இவர்களில் கொரோனா வீரியம் அடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் 5816. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1626. இதன்மூலம் உயிரிழந்தவர்களில் 87% பேரும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 % பேரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

வீரியம் வித்தியாசம் (Malignancy is the difference)

இந்த புள்ளிவிபரத்தில் இருந்து கொரோனாத் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கும், செலுத்திக் கொண்டவர்களுக்கும் தொற்றின் வீரியம் எவ்வாறு இருந்தது என்பது தெளிவாகியிருக்கிறது.

மேலும் படிக்க...

தடுப்பூசிக்கு ஆன்ட்ராய்ட் போன் பரிசு – ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு!

கொரோனாத் தடுப்பூசி போடவில்லையா?-ரேஷன் பொருட்கள் கிடையாது!

English Summary: 87% of victims are not vaccinated - Health Department shocking information!
Published on: 11 October 2021, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now