Health & Lifestyle

Monday, 15 May 2023 11:53 AM , by: R. Balakrishnan

Clay Pot is best

கோடைகாலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் பலரும் குளிர்ச்சியைத் தேடிச் செல்கின்றனர். இந்நிலையில், குளிர்சாதனப் பெட்டியை விடவும் மண்பானையே மிகவும் சிறந்தது என தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

ஆனந்த் மஹிந்திரா ட்வீட் (Anand Mahindra Tweet)

சமூக வலைதளப் பதிவுகள் மூலம் தற்போது பலரது கவனத்தையும் ஈர்ப்பவர் ஆனந்த் மஹிந்திரா. "குளிர்சாதனப் பெட்டியை விட மண்பானையே மிகச் சிறந்தது" என அவர் ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் இப்போது கோடைகாலம் நிலவி வருவதனை சுட்டிக் காட்டும் வகையில், இந்த ட்வீட் அமைந்துள்ளது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா. பலரின் கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சில சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போன்றவை அவருடைய வழக்கம். அதோடு நின்று விடாமல், கவனம் ஈர்க்கும் சில வகைப் பதிவுகளையும் பகிர்வார். அவ்வகையில் இந்த மண்பானை vs குளிர்சாதன பெட்டி ட்வீட் அமைந்துள்ளது.

வெளிப்படையாகச் சொல்வது என்றால் அழகியல் பார்வை அடிப்படையிலும், வடிவமைப்பு ரீதியாகவும் மண்பானையே சிறந்தது. நம் பூமிக்கு ஏற்ற வகையில், நேர்மறையாக உலகம் கவனம் செலுத்தி வரும் சூழ்நிலையில், பானை நம் வாழ்க்கை முறையில் சிறந்த அக்ஸசரியாக இருக்கும் என ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில் பானை மற்றும் குளிர்சாதன பெட்டியின் விலை, லைஃப்-டைம், மெயின்டன்ஸ் ஆகியவை ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

7 வது ஊதியக்குழு: அரசுப் பணியாளர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் உயர்வு!

ரேசன் கடையில் அரிசி கோதுமை இனி கிடையாது: காரணம் இதுதான்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)