அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 13 March, 2023 12:35 PM IST
Amazing medicine for male infertility! - Ashwagandha!

அஸ்வகந்தாவின் நன்மைகளில் சிறந்த தடகள செயல்திறன் மற்றும் தூக்கம் ஆகியவை அடங்கும். மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற நிலைமைகள் உள்ளவர்களுக்கு இந்த மூலிகை ஒரு வரப்பிரசாதம் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அஸ்வகந்தா ஆயுர்வேதத்தில் உள்ள மிக முக்கியமான மூலிகைகளில் ஒன்றாகும், இது இயற்கையான இந்திய மருத்துவத்தின் பாரம்பரிய வடிவமாகும்.

மக்கள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஆற்றல் அளவை அதிகரிக்கவும், செறிவை மேம்படுத்தவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அஸ்வகந்தாவைப் பயன்படுத்துகின்றனர்.

"அஸ்வகந்தா" என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "குதிரையின் வாசனை" என்பது பொருள் ஆகும், இது மூலிகையின் வாசனை மற்றும் அதன் வலிமையை அதிகரிக்கும் திறன் இரண்டையும் குறிப்பிடும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது.

இதன் தாவரவியல் பெயர் விதானியா சோம்னிஃபெரா, மேலும் இது "இந்திய ஜின்ஸெங்" மற்றும் "குளிர்கால செர்ரி" உட்பட பல பெயர்களாலும் அறியப்படுகிறது.

அஸ்வகந்தா செடி இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்ட மஞ்சள் பூக்கள் கொண்ட ஒரு சிறிய புதர் தாவரம் ஆகும். தாவரத்தின் வேர் அல்லது இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறுகள் அல்லது தூள், மன அழுத்தம் மற்றும் கருவுறுதல் பிரச்சினைகள் உட்பட பல்வேறு நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

ஆராய்ச்சியின் அடிப்படையில் அஸ்வகந்தாவின்5 சாத்தியமான நன்மைகள் பின்வருமாறு,

1,மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறைக்க உதவும்

அஸ்வகந்தா மன அழுத்தத்தைக் குறைக்கும் திறனுக்காக மிகவும் பிரபலமானது. இது ஒரு அடாப்டோஜென்(உங்கள் உடல் மன அழுத்தம், பதட்டம், சோர்வு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு பதிலளிக்க உதவும் தாவரங்கள் மற்றும் காளான்கள்) என வகைப்படுத்தப்பட்டுள்ளது, இது உடல் அழுத்தத்தை சமாளிக்க உதவுகிறது.

அஸ்வகந்தா மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை போக்க உதவும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

சான்றுகள்:

58 பங்கேற்பாளர்கள் கொண்ட ஒரு சிறிய ஆய்வில், ஒரு குழுவிற்கு அஸ்வகந்தா கொடுக்கப்பட்டது மற்றொரு குழுவிற்கு போலி மருந்து கொடுக்கப்பட்டது, 8 வாரங்களுக்கு 250 அல்லது 600 மி.கி அஸ்வகந்தா சாற்றை எடுத்துக் கொண்டவர்கள் மருந்துப்போலி எடுத்துக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, ​​அஸ்வகந்தா சாற்றை எடுத்துக் கொண்டவர்களின் மன அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவு கணிசமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் என்னவென்றால், அஸ்வகந்தா எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்கள், மருந்துப்போலி குழுவுடன் ஒப்பிடும்போது தூக்கத்தின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை பெற்றிருருந்தனர்.

எனவே, ஆரம்பகால ஆராய்ச்சிகள் அஸ்வகந்தா மன அழுத்தம் மற்றும் பதட்டத்திற்கு ஒரு உதவியாக இருக்கலாம் என்று கூறுகிறது.


2, டெஸ்டோஸ்டிரோனை அதிகரிக்கவும், ஆண்களில் மலட்டுத்தன்மையை போக்கவும் உதவும்

(டெஸ்டோஸ்டிரோன்- ஆண்மையை நிலைப்படுத்தும் ஹார்மோன்)

அஸ்வகந்தா சில ஆய்வுகளில் ஆண்களின் மலட்டு தன்மை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சான்றுகள்:

ஒரு ஆய்வில், 40-70 வயதிற்குட்பட்ட அதிக எடை கொண்ட 43 ஆண்கள், லேசான சோர்வுடன் இருந்த ஆண்கள் இரு குழுக்களாக பிரிக்க பட்டு ஒரு குழுவினர் அஸ்வகந்தா மற்றும் மற்றொரு குழுவினர் போலி மருந்து உண்டு வந்தனர், அவர்கள் அஸ்வகந்தா சாறு மற்றும் மருந்துப்போலி கொண்ட மாத்திரைகளை 8 வாரங்களுக்கு தினமும் எடுத்துக் கொண்டனர்.

அஸ்வகந்தா டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் ஈடுபடும் பாலின ஹார்மோனான DHEA-S இல் 18% அதிக அதிகரிப்புடன் வெற்றிபெற்றது . மருந்துப்போலி எடுத்தவர்களை விட, அஸ்வகந்தா மூலிகையை எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்கள் டெஸ்டோஸ்டிரோனில் 14.7% அதிக அதிகரிப்பைக் கொண்டிருந்தனர்.

கூடுதலாக, நான்கு ஆய்வுகளின் மதிப்பாய்வில், அஸ்வகந்தா சிகிச்சையானது குறைந்த விந்தணு எண்ணிக்கை கொண்ட ஆண்களில் விந்தணுக்களின் செறிவு, விந்து அளவு மற்றும் விந்தணு இயக்கம் ஆகியவற்றை கணிசமாக அதிகரித்தது.

இது சாதாரண விந்தணு எண்ணிக்கை உள்ள ஆண்களில் விந்தணுக்களின் செறிவு மற்றும் இயக்கம் ஆகியவற்றை அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ashwagandha roots

3, தூக்கத்தை மேம்படுத்த உதவும்

பலர் அஸ்வகந்தாவை நிம்மதியான தூக்கத்தை உறுதிப்படுத்தும் என்று கூறுகின்றனர், மேலும் சில சான்றுகள் இது தூக்க பிரச்சனைகளுக்கு உதவக்கூடும் என்று கூறுகின்றன.

சான்றுகள்:

எடுத்துக்காட்டாக, 65-80 வயதுடைய 50 பெரியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் இரு குழுக்களாக பிரிக்க பட்டு ஒரு குழுவினர் அஸ்வகந்தா மற்றும் மற்றொரு குழுவினர் போலி மருந்து உண்டு வந்தனர்,ஒரு நாளைக்கு 600 மி.கி அஸ்வகந்தா வேரை 12 வாரங்களுக்கு உட்கொண்டவர்கள், மருந்துப்போலி உட்கொண்டவர்களை ஒப்பிடும்போது தூக்கத்தின் தரத்தையும், எழுந்தவுடன் ஒரு புத்துணர்ச்சியையும்
அஸ்வகந்தா வேரை 12 வாரங்களுக்கு உட்கொண்டவர்கள் பெற்றிருந்தனர்.

தூக்கமின்மை உள்ளவர்கள் 8 வாரங்கள் அல்லது அதற்கு மேல் தினமும் 600 மி.கி.க்கு மேல் அஸ்வகந்தா எடுத்துவந்தால் தூக்கத்தின் தரம் சிறப்பாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

4, இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம்

நீரிழிவு அல்லது உயர் இரத்த சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு அஸ்வகந்தா சில நன்மைகளைக் கொண்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சான்றுகள்:

நீரிழிவு நோயாளிகளில் 5 மருத்துவ ஆய்வுகள் உட்பட 24 ஆய்வுகளின் மதிப்பாய்வின்படி, அஸ்வகந்தா இரத்த சர்க்கரை, ஹீமோகுளோபின் A1c (HbA1c), இன்சுலின், இரத்த லிப்பிடுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்த குறிப்பான்கள் ஆகியவற்றைக் கணிசமாகக் குறைத்தது.

வித்ஃபெரின் ஏ (WA) எனப்படும் அஸ்வகந்தாவில் உள்ள சில சேர்மங்கள் சக்திவாய்ந்த ஆண்டிடியாபெடிக் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது மற்றும் உங்கள் இரத்த ஓட்டத்தில் இருந்து குளுக்கோஸை எடுக்க உங்கள் செல்களைத் தூண்டுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிண்றனர்.

5, தடகள செயல்திறன் அதிகரிக்கும்

அஸ்வகந்தா தடகள செயல்திறனில் நன்மை பயக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒரு பயனுள்ள துணையாக இருக்க்கும் என்று ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துகின்றன.

சான்றுகள்:

12 ஆய்வுகள் அடங்கும் ஒரு பகுப்பாய்வில், ஒரு நாளைக்கு 120 மி.கி முதல் 1,250 மி.கி வரை அஸ்வகந்தா எடுத்துக் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் உடற்பயிற்சியின் போது வலிமை மற்றும் ஆக்ஸிஜன் பயன்பாடு உட்பட உடல் செயல்திறனை அஸ்வகந்தா மேம்படுத்தியுள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.

கூடுதலாக, அஸ்வகந்தா தசை வலிமையை அதிகரிக்க உதவும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இறுதி அறிவுரை

அஸ்வகந்தா பல சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு பழங்கால மருத்துவ மூலிகையாகும்.

இது கவலை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், நிம்மதியான உறக்கத்தை ஆதரிக்கவும், குறிப்பிட்ட மக்களில் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அஸ்வகந்தா பெரும்பாலான மக்களுக்கு ஒப்பீட்டளவில் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அஸ்வகந்தாவின் பயன்களை பெற விரும்புவோர் சரியான அளவில் எடுத்து பயன்பெறுமாறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு- தான் பயின்ற பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வு

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருது- உலக கவனத்தை பெற்ற முதுமலை யானை மேய்ப்பர் பொம்மன்-பெள்ளி தம்பதியினர்

English Summary: Amazing medicine for male infertility! - Ashwagandha!
Published on: 13 March 2023, 12:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now