நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2022 10:54 AM IST

பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமிக்ரானுக்கு எதிராக 88 சதவீத பாதுகாப்பு கிடைக்கும் என்பது இங்கிலாந்தில் நடந்த ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஒமிக்ரான் (Omicron)

தென்ஆப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான் வைரஸ், உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. பரவத்தொடங்கிய ஒரு மாதத்திலேயே 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊடுருவி, அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியாவிலும் இதுவரை ஒமிக்ரானுக்கு 1800க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே ஒமிக்ரானில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நம் நாட்டிலும் தொடங்குகிறது.

அதிரடி ஆய்வு (Action study)

இந்தநிலையில், பூஸ்டர் தடுப்பூசி, ஒமிக்ரானுக்கு எதிராக எவ்விதம் செயல்படும் என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அவற்றின் முடிவுகளை இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு தொகுத்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

ஆய்வின் முடிவுகள்:-

கூடுதல் பாதுகாப்பு (Extra security)

2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒமிக்ரானுக்கு எதிராக கூடுதல் பாதுகாப்பு கிடைக்கிறது.
2-வது டோஸ் தடுப்பூசி போட்ட 6 மாதங்களுக்குப் பிறகு அதன் பாதுகாப்பு திறன் 52 சதவீதமாகக் குறைகிறது.

ஆபத்து குறைகிறது

ஆனால், பூஸ்டர் தடுப்பூசி போட்டவுடன் அதன் பாதுகாப்பு திறன் 88 சதவீதமாக அதிகரிக்கிறது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதால், ஒமிக்ரானுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்தும் குறைகிறது. அந்த அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

வாய்ப்பு குறைவு (Less likely)

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட 2 ஆய்வுகளும் 2 டோஸ் போட்டவர்களை விட பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து கணிசமாகக் குறைவாக இருப்பதைக் காட்டுகின்றன.

டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரானுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஆபத்து மூன்றில் ஒரு பங்காக உள்ளது. எனவே அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வரவேண்டும்.

மேலும் படிக்க...

மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் செல்ல இன்று முதல் தடை!

நாடு முழுவதும் இன்று முதல் சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி!

English Summary: Booster Vaccine, 88% Safety from Omicron- Study Information!
Published on: 04 January 2022, 10:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now