சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 3 May, 2023 5:41 PM IST

பழுப்பரிசி எனும் பிரவுன் அரிசியில், ‘அலெயுரன்’ என்ற தோல் நீக்கப்படுவது இல்லை. இந்த தோல் உள்ள கைக்குத்தல் அரிசியில் 67 சதவிகித வைட்டமின் பி3, 80 சதவிகித வைட்டமின் பி1, 90 சதவிகித வைட்டமின் பி6, மாங்கனீசு, செலினியம், இரும்புச் சத்துகளில் பாதிக்கும் மேல் உள்ளன. மேலும் நார்ச் சத்தும், நல்லது செய்யும் அத்தியாவசியக் கொழுப்பு அமிலமும் உள்ளன. ஏறத்தாழ 10 சதவிகிதம் அரிசி வீணாகிறது என்று நெல் விவசாயிகள் வருந்திச் சொல்கின்றனர். எனவே பழுப்பு கைக்குத்தல் அரிசிதான் நல்லது.

இந்த உண்மை தெரிந்த பிறகு அரிசிக்கு ஏன் பாலிஷ் அலங்காரங்கள் என்று கேட்டால், ‘அலெயுரன்’ உறையை நீக்கினால்தான் அரிசியின் ஆயுள்காலம் அதிகரிக்கும். வணிகத்துக்கு அதுதானே அடிப்படை என வாதிடுகிறார்கள். அரிசியின் ஆயுள்காலத்தை நீட்டித்து லாபம் ஈட்டும் வணிகம், அதை உண்ணும் மனிதனின் ஆயுள்காலம் குறைவதைக் கண்டுகொள்வது இல்லை! பழுப்பாக இருக்கிறது என்பதாலேயே பலரும் இந்த அரிசியை சமைப்பது இல்லை.

‘பழுப்பு அரிசியே நல்லது’

முழுமையாகத் தோலுரித்து பாலிஷ் போட்டு வெள்ளையாக்கப்படும் அரிசியில் கார்போஹைடிரேட் தவிர இதரச் சத்துகள் ஏதும் இல்லை என்பது நமக்குத் தெரியும். மேலும் புழுங்கல் நெல்லில் உள்ள எண்ணெய்ச் சத்து அரிசியில் ‘அமைலோஸ்’ எனும் சர்க்கரைப் பொருள் எளிதில் உடைந்து, சர்க்கரையை ரத்தத்தில் கலக்கவிடாத ‘அமைலோ பெக்டின்’ எனும் ஒரு கூட்டுப்பொருளாக மாறுகிறது. அதனால் பழுப்பரிசியைச் சமைத்துச் சாப்பிடும் போது அதில் உள்ள சர்க்கரையை ரத்தத்தில் கலக்க விடாது. ஆதலால், தேவையான ஆற்றல் கிடைக்கிறது.

ரசாயன உரம் போடாமல் வளர்க்கப்பட்ட மாப்பிள்ளை சம்பா, கவுனி, காட்டுயாணம், குழியடிச்சான் முதலான பாரம்பரிய அரிசி ரகங்கள், பட்டை தீட்டாத தினை, சாமை, வரகு, குதிரைவாலி ஆகியவற்றின் அரிசிகள் லோ கிளைசிமிக் தன்மையைத் தரும். இந்தத் தானியங்களைச் சோறாகச் சமைத்த பின்பு, கீரை, பச்சை நிற அவரை, வெண்டை, கத்தரி போட்ட குழம்பு, எண்ணெயில் பொரிக்காத வேகவைத்த நாட்டுக்கோழிக் குழம்பு, மீன் குழம்பு கலந்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி, இதய நோய், புற்று நோய், அதிக உடல் எடை, ‘பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி போன்ற சிக்கல்கள் அண்டாமல் இருக்கும். இப்படியான பாலிஷ் பளபளப்பு இல்லாத தானியங்கள்தான் அன்றாட உணவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க: 

லியோ படத்தில் நடித்து வந்த முக்கிய பிரபல நடிகர் மனோபாலா காலமானார்

அரசு பேருந்து நிறுத்தம் கொண்ட உணவகங்களில் முறைகேடா? இந்த எண்ணில் புகாரளிக்கவும்

English Summary: Brown Rice - Health benefits
Published on: 21 December 2018, 04:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now