Health & Lifestyle

Saturday, 19 February 2022 12:26 PM , by: Elavarse Sivakumar

சிறுகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும், வெண்ணெயில் ஸ்டார்ச் உள்ளிட்டவைக் கலப்படம் செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே நாம் வாங்கும் வெண்ணெய் கலப்படம் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டியது மிகமிக முக்கியம்.

வெண்ணெயின் நறுமணமும், சுவையும் மிக சாதரண உணவைக் கூட உடனடியாக உயர்த்தி விடும். வெண்ணெய், இந்திய சமையலறைகளில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் காணப்படும் மிகவும் பொதுவான கிச்சன் மூலப்பொருள். ரொட்டி முதல் பராத்தா மற்றும் சூப்கள் வரை – ஒரு துளி வெண்ணெய் எண்ணற்ற வழிகளில் அனுபவிக்க முடியும்.

இருப்பினும், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல உணவுப் பொருட்களைப் போலவே, வெண்ணெயில் கூட கலப்படம் செய்யப்படலாம்.
அதாவது மாவுச்சத்து எனும் ஸ்டார்ச் (Starch), வெண்ணெயில் காணப்படும் மிகவும் பொதுவான வகை கலப்படங்களில் ஒன்றாகும், இது அதிகளவில் உட்கொள்ளும் போது கடுமையான உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கும்.

உங்கள் வெண்ணெயில், கலப்படம் உள்ளதா என்பதை நாம் கண்டறிய ஏதுவாக, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) வெண்ணெயில் ஸ்டார்ச் கலப்படத்தைக் கண்டறிய எளிய சோதனையைப் பகிர்ந்துள்ளது.

பரிசோதிப்பது எப்படி?

  • ஒரு கண்ணாடி கிண்ணத்தில் சிறிது தண்ணீர்/எண்ணெய் எடுக்கவும்.

  • அதில் ½ தேக்கரண்டி வெண்ணெய் சேர்க்கவும்.

  • கிண்ணத்தில் 2-3 சொட்டு அயோடின் கரைசலைச் சேர்க்கவும்.

  • வெண்ணெய் கலப்படமற்றதாக இருந்தால், கரைசலின் நிறம் மாறாது.

  • அதுவேக் கலப்படம் செய்யப்பட்ட வெண்ணெய்யாக இருந்தால், அந்தக் கரைசல், நீல நிறமாக மாறும்.

மேலும் படிக்க...

மூத்தக் குடிமக்களுக்கான சிறப்பு டெபாசிட் திட்டம் நீட்டிப்பு- SBI அறிவிப்பு!

மனைவியைக் கொன்றுக் கூறுபோட்டு சமைத்துத் தின்றக் கணவன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)